சிதம்பரத்தில் ரம்ஜான் தொழுகையின் போது திடீர் மாரடைப்பு :இஸ்லாமியர் பலி
சிதம்பரம் அருகே ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர் ஒருவர் மாரடைப்பால் காலமானார். ரம்ஜான் பண்டிகை மார்ச் 31அன்று நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிக ளில் உள்ள இஸ்லாமிய மக்கள் வண்டி கேட் ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் தொழுகைக்காக திங்களன்று (மார்ச் 31) காலை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூட்டினர். அப்போது சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ஜாபர் அலி (55) என்பவர் குடும்பத்துடன் தொழுகையில் பங்கேற்க காலையில் தொழுகை நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தார்கள். தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு காவல்துறை வாகனத்தின் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரி ழந்துவிட்டதாக தெரிவித்தனர். ரம்ஜான் பண்டி கையை கொண்டாடுவதற்கு புது துணி களை அணிந்து கொண்டு தொழுகைக்கு வந்த இடத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.