‘நியூஸ் 7’ செய்தியாளர் நேசபிரபு மீது சமூக விரோதிகள் நடத்திய தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் பணியாற்றிவரும் ‘நியூஸ் 7’ செய்தியாளர் நேசபிரபு மீது சமூக விரோதிகள் பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி யுள்ளனர். இந்த கொலைவெறித் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக் கிறது. நியூஸ் 7 தொலைக்காட்சியின் செய்தியாளர் நேச பிரபு காம நாயக்கன் பாளையம் கிருஷ்ணா புரம் பகுதியில் வசித்து வருகிறார். அவர் வெளியிட்ட செய்திக்காக இரண்டு நாட்களாக பின்தொடர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் நம்பர் பிளேட் இல்லாத வாகனத்தி லும் காரிலும் வந்து சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அவர் போலீ சாரிடம் புகார் தெரிவித்து பாது காப்பு கோரியுள்ளார். இருப்பினும் சமூக விரோத சக்திகள் அவரு டைய வீட்டிற்கு அருகிலேயே காத்திருந்துள்ளனர். நிலைமை யை உணர்ந்த நேச பிரபு அங்கி ருந்து தப்பி அருகில் உள்ள பெட் ரோல் பங்கிற்கு சென்று அங்கி ருந்து போலீசாருக்கு தகவல் தெரி வித்துள்ளார்.
அந்த நேரத்தில் அங்கே புகுந்த சமூக விரோதிகள் சரமாரியாக அவரை வெட்டிவிட்டு தப்பித்துள்ளனர். கொலை வெறி கொண்ட இந்த தாக்குதலில் நேச பிரபு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே செய்தியாளர் புகார் கொடுத்துவந்த நிலையில் உள்ளூர் காவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டிருப்பின் இந்த கொலைவெறித் தாக்குதல் நடந்தி ருக்க வாய்ப்பில்லை.
உரிய நேரத் தில் நடவடிக்கை மேற்கொள்ளா தது சமூக விரோத சக்திகளுக்கு உதவியாக உள்ளூர் காவல்துறை யினர் செயல்பட்டுள்ளனர் என்பது தெரிகிறது. எனவே, குற்றவாளி களை விரைந்து கைது செய்து தண்டிப்பதுடன், தவறிழைத்த காவ லர்கள் மீதும் துறைவாரியான நட வடிக்கை எடுக்க வேண்டுமென வும், அவருக்கு உரிய சிகிச்சை யை அளிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்து கிறது.