tamilnadu

img

டோல்கேட், இன்சூரன்ஸ் கட்டணங்களை குறைக்க மோட்டார் வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை

டோல்கேட், இன்சூரன்ஸ் கட்டணங்களை குறைக்க மோட்டார் வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை

சென்னை, ஜூன் 19- டோல்கேட், இன்சூரன்ஸ் கட்ட ணங்களை குறைக்க வேண்டும் என்று மோட்டார் வாகன சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை பெருநகர் மோட்டார் வாகன தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) 22ஆவது ஆண்டு பேரவைக் கூட்டம் வியாழனன்று (ஜூன் 19) ஓட்டேரியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆர்.ஜெயராமன் தலைமை தாங்கினார். சங்க கொடியை துணை பொதுச்செயலாளர் அ.ராயப்பன் ஏற்றி வைத்தார். துணைத் தலைவர் டி.ரமேஷ் வரவேற்றார்.  வி.கண்ணன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன துணைத் தலைவர் ஏ.பி.அன்பழகன் பேரவையை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் வி.குப்புசாமி வேலை அறிக்கையையும், பொருளாளர் டி.ஜெ.கிருஷ்ணமூர்த்தி வரவு - செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சிஐடியு மாவட்ட துணைப் பொதுச்செய லாளர் வி.ஜெயகோபால் வாழ்த்தி பேசினார். தலைவர் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளனத்தின் தலைவர் கே.ஆறுமுக நயினார் பேரவையை நிறைவு செய்து பேசினார்.  துணைத் தலைவர் பி.ஆனந்தன் நன்றி கூறினார். தீர்மானங்கள் புதிய மோட்டார் வாகன சட்டம் 2019ஐ திரும்பப்பெற வேண்டும், பிஎன்எஸ் 106 (1) (2) சட்டத்தை திரும்பபெற வேண்டும், தேசிய நெடுஞ்சாலைகளில் ஓட்டுநர்களுக்கு மோட்டார் விதிகளின் படி பாதுகாப்புடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்க வேண்டும், டோல்கேட், இன்சூரன்ஸ் கட்டணங்களை குறைக்க வேண்டும், ஓலா, உபேர் போல அரசே செயலியை தொடங்கும் என அறிவித்ததை நடைமுறைப்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் வரியை பாதியாக குறைக்க வேண்டும், வி.வி.கிரி லேபர் இன்ஸ்டிடியூட் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும், நலவாரிய பயன்கள் பெறு வதை எளிமையாக்க வேண்டும், காவல்துறை, ஆர்டிஓ அலுவலகங்களை ஓட்டுநர்கள் அச்சமின்றி அணுகும் நிலைக்கு மாற்ற வேண்டும், தரமான சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தலைவராக ஆர்.ஜெயராமன், செயல் தலைவராக அ.ராயப்பன், செயலாளராக வி.குப்புசாமி, பொருளாளராக டி.ஜெ.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 11 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.