சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை மகளிர் ஆணையத் தலைவரிடம் மாதர் சங்கம் மனு
சென்னை, ஜூன் 11 - சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் தாம்பரம் சானடோரியம் மகளிர் அரசு சேவை இல்லம் உள்ளது. இங்கு பயிலும் 13 வயது சிறுமியை ஜூன் 8ந் தேதி விடுதி காவ லாளி மேத்யூ (50) வன்கொடுமை செய்துள் ளார். அப்போது சிறுமியின் கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனை யடுத்து சிறுமி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட மேத்யூ கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமரியிடம், அனைந்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் ம.சித்ர கலா, துணைச்செயலாளர் டி.விஜயகுமாரி ஆகியோர் மனு அளித்தனர். அதில், காப்பகத்தின் தொடர்பு எண்களை பெற்றோர்களுக்கு வழங்க வேண்டும்; அறி விப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும். மாணவிகள் தங்கி இருக்கும் அறைகள், கழி வறைகளை சுத்தமாக பராமரித்திட கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும். சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு உயர் சிகிச்சையோடு தீர் உதவியாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். மாதர் சங்கம் போன்ற அமைப்புகளை அவ்வப்போது விடுதிகளை ஆய்வுகள் செய்ய அனுமதிக்க வேண்டும். இவற்றை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.