tamilnadu

வரும்... ஆனா, வராது...

தள்ளுபடி செய்யப்பட்ட வராக் கடன்க ளில் பெரும்பகுதி பெரு நிறுவனங்க ளால் வாங்கப்பட்டது என்று நாடாளு மன்றத்தில் அமைச்சர் பகவத் காரத் தெரிவித்தி ருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் எந்தெந்த நிறு வனங்களுக்கு எவ்வளவு தள்ளுபடி செய்யப் பட்டது, அதனால் அரசுக்கு எவ்வளவு செலவு (இழப்பு) ஏற்பட்டது, அவ்வாறு தள்ளுபடி செய்வ தற்கான காரணங்கள் என்ன, அதற்கான அபரா தங்களாக வங்கிகள் வசூலித்த தொகை எவ்வளவு  என்றெல்லாம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கான பதிலில்தான் அமைச்சர் இதைத் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 5 ஆண்டுகளில் ரூ.10,57,326 கோடி தள்ளு படி செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் ரூ.5,55,281 - அதாவது பாதிக்கும் மேல் பெருநிறுவனங்க ளின் கடன் என்றும் அந்த பதில் குறிப்பிடுகிறது. ஆனால், கடனைச் செலுத்தாத கார்ப்பரேட் நிறுவ னங்கள் பற்றிய தகவல்களை ரிசர்வ் வங்கி  பராமரிப்பதில்லை என்று அரசு பதிலளித்திருக்கி றது. அதே நேரத்தில் பெரு நிறுவனங்களின் கடன் எவ்வளவு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்ற தகவலைத் தெரிவித்திருந்தாலும், அந் நிறுவ னங்களின் பெயரை வெளியிட ரிசர்வ் வங்கிச் சட்டத்தில் இடமில்லை என்றும் அமைச்சர் பதி லளித்திருக்கிறார்.

இந்தத் தள்ளுபடிகளால் எவ்வளவு செலவு என்ற கேள்விக்கு, அரசுக்கு செலவு(இழப்பு) எது வுமில்லை, வங்கிகள்தான் தள்ளுபடி செய்கின்றன என்று பதிலளித்திருக்கிற அமைச்சர், கடன்கள் ‘ரைட்-ஆஃப்’தான் செய்யப்பட்டுள்ளன, திருப்பிச் செலுத்தும் கடமையிலிருந்து கடன் வாங்கி யவர்கள் விடுவிக்கப்படவில்லை என்று குறிப் பிட்டுள்ளார். ‘வரும்... ஆனா, வராது’ மாதிரி, ‘கடன்தான், ஆனால் இல்லை’ என்பதாக அமைச்சரின் பதில் அமைந்திருக்கிறது. 

வரிச் சலுகைகள் பெறுவது முதலான கார ணங்களுக்காக, வங்கிகள் தங்கள் கணக்குப் புத்தகங்களிலிருந்து அவற்றை நீக்குவதாக அமைச்சர் குறிப்பிடுகிறார். அதாவது, வராக் கடன் களை கணக்கிலிருந்து நீக்கிவிட்டு, கணக்கு சரி காட்டும் வகையில் என்று விடைக்கேற்ப கணக்கை உருவாக்கிக்கொள்ளும் நடவடிக் கையே இது. கடன்கள் ஏன் தள்ளுபடி செய்யப் பட்டது என்று கேள்வி எழுப்பினால், கடனைத் திரும்பச் செலுத்தாதது தவறே இல்லை என்பது போலவும், வங்கிகள்தான் அவர்களது தேவைக் காக ரைட்-ஆஃப் என்று மாற்றி எழுதுவது போலவும் அரசின் பதில் அமைந்திருக்கிறது.

அப்படி மாற்றி எழுதப்பட்ட (தள்ளுபடி செய்யப்பட்ட) கடன்களை வசூலிக்க வழக்குகள், தீர்ப்பாயங்கள் என்று பலவித முயற்சிகளை மேற்கொள்வதாகவும் அரசு பதிலளித்திருக்கிறது. ஆனால், அவ்வாறான முயற்சிகளின்மூலம் எவ்வளவு வசூலிக்கப்பட்டது என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

வங்கிகள் அபராதங்களாக வசூலித்த தொகை  2022-23 நிதியாண்டில் மட்டும் ரூ.5,309.80  கோடி என்று பதிலளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் பெரு நிறுவனங்களிடமிருந்து, கடனை உரிய நேரத்தில் செலுத்தாததற்காக வசூலிக்கப் பட்ட அபராதம் எவ்வளவு என்ற விபரம் இல்லை. குறைந்தபட்ச இருப்பு வைக்காதது, ஏடிஎம்மில் பணம் எடுத்தது என்பதற்கெல்லாம் எளிய மக்களி டம் வசூலிக்கப்பட்ட அபராதம்தான் மிகப் பெரும் பகுதியாக இருக்கும் என்பது நமக்கே தெரியும். 

தள்ளுபடிகளை பெரு முதலாளிகளுக்குச் செய்துவிட்டு, வசூலிக்க முடிந்த வழிகளி லெல்லாம் எளிய மக்களிடம் வசூலித்திருக்கி றார்கள். ஆனால், அது வெளிப்படையாகத் தெரி யாதபடி, ‘ஈயம் பூசுனாப்புலயம் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும்’ கதையாக பதில ளிக்கிறது அரசு!