6-ஆவது முறையாக தமிழகம் வரும் மோடி
சென்னை, ஏப்.2- தமிழகத்தில், மக் களவைத் தேர்தல் ஏப்ரல் 19 அன்று ஒரே கட்டமாக நடைபெறு கிறது. இந்த நிலை யில், கடந்த ஜனவரி யில் 2 முறையும் பிப்ர வரியில் 2 முறையும் வருகை தந்த பிரதமர் மோடி, மார்ச் 4 சென்னை பொதுக்கூட்டத்தில் பேசி னார்; மார்ச் 18 கோவையில் ‘ரோடு ஷோ’ நடத்தினார். ஆனால், மோடியின் பிரச்சா ரத்திற்கு தமிழகத்தில் போதிய வரவேற்பு இல்லை.
எனினும், ஏப்ரல் 9 அன்று பிரதமர் மோடி 6-ஆவது முறையாக மீண்டும் சென்னை வருகிறார். அன்றைய தினம் சென்னையில் அவர் ‘ரோடு ஷோ’ நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப். 5 அன்று தமிழகத்திற்கு வருகை வருகிறார். பல்வேறு இடங்களில் நடை பெறும் பிரச்சாரக் கூட்டங்களில் அவர் உரையாற்றுகிறார்.
கொள்கை அற்றவர் ராமதாஸ் ஜெயக்குமார் விமர்சனம்
சென்னை, ஏப்.2- பாமக நிறுவனர் ராமதாஸை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடு மையாக விமர்சித் துள்ளார். இதுதொடர் பாக அவர் கூறியி ருப்பதாவது:
“தொகுதிகள், மற்றவைக்கான பேரம் அதிகமாகும் இடத்தில்தான் ராம தாஸ் உடன்படுவாரே தவிர கொள்கை, கூட்டணி, வெங்காயம்.. எதுவும் அவ ருக்கு கிடையாது. பாமக தொடங்கும் போது அரசுப் பதவிக்கு வரமாட்டோம், வந்தால் சவுக்கால் அடியுங்கள் என்று ராமதாஸ் கூறினார். அவரது மருமகள் தேர்தலில் நிற்கிறார். மகன் அன்புமணி ராமதாஸ் ஒன்றிய அமைச்சராக இருந் துள்ளார்.
பாமகவுக்கு அங்கீகாரம் கொடுத் தது, அன்புமணியை மத்திய அமைச்ச ராக்கியது அதிமுக. ஜெயலலிதாதான் அன்புமணியை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தவர். சட்டப்பேரவையில் 5 எம்எல்ஏக்களை கொண்ட பாமகவால் தனியாக நின்று ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாது” என ஜெயக் குமார் சாடியுள்ளார்.