tamilnadu

img

தமிழக மக்களைக் கசக்கிப் பிழியும் மோடி அரசு

சென்னை, மார்ச் 25- தமிழ்நாட்டில் அடுத்த 2 அல் லது 3 ஆண்டுகளில் மேலும் புதி தாக 20 சுங்கச்சாவடிகள் திறக்கப் பட இருப்பதாக செய்திகள் வெளி யாகியுள்ளன. தமிழ்நாட்டில் அதிகப்படியான சுங்கச்சாவடிகள் இருப்பதாக நீண்ட காலமாகவே மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.  ஒன்றிய பாஜக அரசானது, நாட்  டிலேயே மிக அதிகமான சுங்கச்  சாவடிகளைத் திறந்து தமிழக மக்  களை வஞ்சித்து வருகிறது.

தமிழ்  நாட்டில் மொத்தம் 65 சுங்கச்சாவடி கள் உள்ளன. அவற்றில், 12 சுங்  கச்சாவடிகள் கடந்த மூன்று ஆண்டு களில் திறக்கப்பட்டவை ஆகும்.  கடைசியாக திருப்பூர்  அவினாசிபாளையம் தேசிய நெடுஞ்சாலை 381இல் வேலம்பட்டி  சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு, அது மார்ச் 1 முதல் செயல்பட்டு வரு கிறது. அதற்கு முன்பு மதுரை செட்டி குளம் நத்தம் துவரங்குறிச்சி பகுதி யில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 785இல் உள்ள பரளி புதூர் சுங்கச்  சாவடி பிப்ரவரி 8 முதல் செயல் படத் தொடங்கியது.

அங்கே கடந்து  செல்லும் நான்கு சக்கர வாகனம் ஒரு முறை செல்ல ரூ. 180 கட்டண மாகச் செலுத்த வேண்டும். மாநி லத்தில் வேறு எந்த சுங்கச்சாவடியி லும் இந்தளவுக்கு அதிக கட்டணம்  இல்லை. இதனால் ஆத்திரம டைந்த வாகன ஓட்டிகள் மார்ச் 6  அன்று இந்த சுங்கச்சாவடியை சூறையாடினர். இப்படிப் பல இடங்களில் ஏற்க னவே சுங்கச்சாவடிகளுக்கு கடும் எதிர்ப்பு இருக்கும் போதிலும் புதிய சுங்கச்சாவடிகளைத் திறக்க நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.

பெங்களூரு- சென்னை எக்ஸ்பிரஸ் சாலையில் 6 சுங்கச்சாவடிகள், சித்தூர்-தச்சூர் விரைவுச்சாலை, விக்கிரவாண்டி- சோழபுரம்- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை 36இல் தலா மூன்று சுங்கச்சாவடிகள் எனப் புதிதாக 20  சுங்கச்சாவடிகளைத் திறந்து மக்  களை கொள்ளையடிக்கத் திட்டமிட்  டுள்ளது.  அடுத்த 2 அல்லது 3 ஆண்டு களில் இந்த சுங்கச்சாவடிகளைத் திறக்க நெடுஞ்சாலைகள் ஆணை யம் முடிவு செய்துள்ளது. இது பய ணிகளை, குறிப்பாக லாரி உரிமை யாளர்களை அதிர்ச்சிக்கு உள் ளாக்கியுள்ளது. “லாரி ஓட்டுநர்களிடம் ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் வசூலிக்க வேண்டும் என நாங்கள் விடுத்த கோரிக்கையை அரசு இது வரை ஏற்கவில்லை.

தேர்தல் காலங்  களில் இவர்கள் அளிக்கும் வாக்கு றுதிகளை நம்ப முடியாது. ஏனென்  றால் நிதின் கட்காரி சாலை அமைக்  கச் செலவான தொகையைத் திரும்பப் பெற்ற சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளையும் 60 கி.மீ. சுற்ற ளவில் இரு சுங்கச்சாவடிகள் இருந்  தால் அதையும் நீக்குவோம் என்  றார். ஆனால், இரண்டு வாக்குறுதி களும் நிறைவேற்றப்படவில்லை. கட்காரி இப்போது ஜிபிஎஸ் அடிப்ப டையிலான சுங்க கட்டணத்தை வசூலிப்போம் என்கிறார். இதனால் நெடுஞ்சாலையைக் கடக்கும் அனைத்து வாகனங்களும் கட்ட ணம் செலுத்த வேண்டி இருக்கும்.  இது அனைவருக்கும் பெரும் சுமை யாக இருக்கும். குறிப்பாக லாரி ஓட்டுநர்களுக்கு இது கூடுதல்  சுமையைத் தான் தரும்” என்று லாரி  ஓட்டுநர்கள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.