வாக்குறுதி...
n 2014 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில், தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைகள் வழங்கப்படும் என்று மோடி வாக்குறுதி அளித்தார். தனது வாக்குறுதிக்கு ஆதாரமாக ஏப்ரல் 27, 2019 அன்று பிரதமர் மோடி தொலைக்காட்சியில்,”ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 2.5 கோடி வேலைகள் சேர்க்கப்படுவதாக பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன” என்றும் கூறினார்.
உண்மை என்ன?
n கடந்த 2016-17 காலகட்டத்தில் நாட்டில் விவசாயம், சேவைத்துறை, கிராமப்புறம் அல்லது நகர்ப்புறங்கள் என அனைத்து வகையான வேலைகளிலும் சுமார் 41.27 கோடி பேர் பணியாற்றினர். ஆனால் அடுத்த 5 ஆண்டுகளில் அதாவது 2022-23இல் இந்த எண்ணிக்கை 40.57 கோடியாகக் குறைந்தது. அதாவது கிட்டத்தட்ட 70 லட்சத்துக்கும் அதிகமான அளவில் வேலையிழப்பு ஏற்பட்டது.
n 2022-23இல் வேலையின்மை 7.6 சதவீதமாக உள்ளது. அதாவது சுமார் 3 கோடி பேர் வேலையில்லாமல் உள்ளனர். இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் கொரோனா காலகட்டத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் 25 சதவீதத்திற்கு மேல் அதிகரித்தததை வேலையின்மை தரவில் சேர்க்கவில்லை. இந்தத் தோல்வியை மூடிமறைக்க, மோடியும் அவரது அமைச்சர்களும் அடிக்கடி தவறான புள்ளிவிவரங்களையும் அறிக்கைகளையும் வெளியிட்டு வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளது போன்று காட்டுகின்றனர்.
n 2015-16 மற்றும் 2022-23க்கு இடைப்பட்ட காலத்தில் 4.1 கோடி நபர்களுக்கு முத்ரா யோஜனா கடன்கள் கொடுக்கப்பட்டிருப்பதையும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் சோகமான விஷயம் என்றால் சராசரி கடன் தொகை ரூ.55,622 மட்டுமே. புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த சிறு வணிக உரிமையாளருக்கு இந்தத் தொகை எவ்வாறு உதவும் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது.
n மோடி தனது கொள்கைகள் மக்களை விவசாயத்திலிருந்து பாதுகாப்பான, உற்பத்தி அல்லது சேவையில் சிறந்த ஊதியம் பெறும் வேலைகளுக்கு மாற்றும் என்றும் உறுதியளித்தார். மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பொருள் உற்பத்தியின் பங்களிப்பு 17 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயரும் என்று அவர் உறுதியளித்தார். ஆனால் உண்மையான நிலவரம் என்னவென்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொருள் உற்பத்தியின் பங்களிப்பு 2020க்குள் வெறும் 13 சதவீதமாக சுருங்கியது. மிகவும் சிரமத்துடன் மெதுவாக தற்போதுதான் 17 சதவீதத்தையே அடைந்துள்ளது.
n வேலையின்மை நெருக்கடியால் மக்கள் மீண்டும் கிராமங்களுக்குச் சென்று அதிக வேலைப்பளுவுடன் உள்ள வேலைகள் மற்றும் வீழ்ச்சியடைந்து வரும் விவசாயத் துறையிலிருந்து தங்களால் இயன்றதைச் சிறிது சம்பாதிக்க முயற்சிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்தியாவின் தொழிலாளர்களில் 46 சதவீதம் பேர் விவசாயம் அல்லது அது தொடர்பான நடவடிக்கைகளில் பணிபுரிகின்றனர். விவசாயத் தொழிலாளர்கள் சொற்பக் கூலியில் வேலை செய்கிறார்கள், அதுவும் பருவகாலங்களில் மட்டுமே. இவை அனைத்தும் வேலைவாய்ப்பு எண்ணிக்கையாக கணக்கிடப்படுகின்றன. இருப்பினும் இது உண்மையில் மறைக்கப்பட்ட வேலையின்மை.
n 2014-15 ஆம் ஆண்டில், சுமார் 5.8 கோடி பேர் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (MGNREGS) பணிபுரிந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2022-23இல் 8.8 கோடியாக உயர்ந்தது. 100 நாள் வேலை என்று கூறப்பட்டாலும், ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஒரு வருடத்தில் சராசரியாக 50 நாட்கள் மட்டுமே வேலை கொடுக்கப்படும் நிலையில், இந்த வேலைக்கு சம்பளமாக ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.237/- மட்டுமே கிடைக்கிறது.
n கடினமான வேலைக்கு குறைந்த ஊதியம் பெறும் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஒரே ஆண்டில் 8.8 கோடி பேர் சார்ந்திருப்பது வேலை நெருக்கடியின் அளவிற்கு முக்கிய சான்றாகும். ஆனால் தற்போது இந்த உயிர்காக்கும் திட்டமும் நிதியின்றி தவிக்கிறது.
n பெண்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப்புறங்களில் அவர்களின் வேலையின்மை விகிதம் ஆண்களை விட இரு மடங்காகவும் நகர்ப்புறங்களில் மூன்று மடங்காகவும் உள்ளது. சமீபத்தில், பெண்களின் வேலைப் பங்கேற்பு அதிகரித்துள்ளதாகக் கூறும் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன, ஆனால் இவை தவறானவை. விலைவாசி உயர்வு, ஊதியம் குறைவு மற்றும் வேலைகள் கிடைக்காத நிலையில் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் உணவளிப்பதற்காகப் பல வகையான வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள பெண்களால் ‘சுய தொழில்’ மற்றும் ‘சம்பளமில்லாத” வேலைகளும் அதிகரித்து வருகின்றன.
n ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் படைகள் முதல் பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், நீதித்துறைகள், வங்கிகள் என கிட்டத்தட்ட 10 லட்சம் காலியிடங்கள் உள்ளன. இங்கு ஆட்சேர்ப்பு எதுவும் நடைபெறவில்லை.
n மாநில அரசுப் பணிகளில் 1.04 லட்சம் காலியிடங்களுக்கான தேர்வில் வினாத்தாள் கசிந்த 41 நிகழ்வுகளில், சுமார் 1.4 கோடி இளம் விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலோர் இன்னும் செயல்முறை முடிவடையும் வரை காத்திருப்பதாகவும் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
n அரசு பொது முதலீட்டை அதிகரிக்க வேண்டும். அதற்கான ஆதரவை வழங்க வேண்டும்.
n விவசாயிகளுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலை (MSP) உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
n தொழில்துறை தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான வேலைகள் மற்றும் சிறந்த ஊதியங்கள் வழங்க வேண்டும்.
n விவசாயத் தொழிலாளர்களுக்கு உத்திரவாதப்படுத்தப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் மற்றும் தேசிய ஊரக வேலை திட்டத்தின் வேலைநாட்கள் மற்றும் ஊதியங்கள் அதிகரிக்க வழிவகை மேற்கொள்ள வேண்டும்.
n தொழில்துறையில் 65 சதவீத வேலைவாய்ப்பை வழங்குவதற்காக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) துறையை ஆதரிக்க வேண்டும். முக்கியமாக நாட்டின் பொதுத்துறையை பாதுகாக்க வேண்டும்.
n வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பெருநிறுவன ஏகபோகங்களின் பங்கைக் குறைக்க வேண்டும்.
n தனியார்மயக் கொள்கையை அரசு கைவிட வேண்டும். தனியார் துறையால் மக்களின் பிரச்சனைகளுக்கு ஒருபோதும் தீர்வு வழங்க முடியாது என்பதை அரசு உணர வேண்டும்.
60,000 பணியிடங்களுக்கு 48 லட்சத்திற்கும் அதிகமான தேர்வாளர்கள்
பிப்ரவரி மாத நடுப்பகுதியில் 60,000 காவலர்கள் பணியமர்த்தப்பட உள்ளதாக பாஜக ஆளும் உத்தரப்பிர தேச அரசாங்கம் அறிவித்தபோது, 48 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் தேர்வு மையங்களில் குவிந்ததால், உத்தரப்பிரதேச மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் மிக மோசமான நெரிசலுடன் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டும், ரயில் நடைமேடைகளில் உறங்கியும் ஒரு வழியாக எப்படியோ கடும் போராட்டத்துடன் தேர்வறைக்குச் சென்று, தேர்வு எழுதினர்.
இஸ்ரேல் போர் மண்டலத்தில்...
சமீபத்தில் வேலையில்லாதவர்களின் விரக்தியாலும், இந்திய அரசாங்கத்தின் அலட்சியத்தாலும் பிப்ரவரி மாத மத்தியில் இஸ்ரேலின் போர் மண்டலத்தில் பணி புரிவதற்காக 10,000 கட்டுமானத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியது. இஸ்ரேலின் போர் மண்டலதிற்கான ஆட்சேர்ப்பு பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்த்துப் போராடுவோம்!
பாஜகவை தோற்கடிப்போம்!
தமிழில் : எம்.சதீஷ்