“பிரதமர் மோடி, இந்திய மக்களிடையே பிரிவை ஏற்படுத்தும் வகையில், நாலாம் தர பேச்சாளரைப் போல பேசியிருப்பது உலக நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படுகிறது என்பதற்குச் சான்றாக, மோடியின் வேட்பு மனுவை தகுதி இழப்புச் செய்வதுடன், அவர் தொடர்ந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்க வேண்டும்” என்று ம.ம.க. தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.