tamilnadu

img

3,969 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை அவயங்கள்

3,969 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை அவயங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்க ளன்று (ஏப்.8) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் செயற்கை கை, கால் போன்றவைகளை விரைந்து வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து பாமக உறுப்பினர் அருள் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நவீன செயற்கை அவயம் வேண்டி விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு, உடனுக்குடன் ஒப்புதல் அளித்து 30 நாட்களுக்குள் உபகரணம் வழங்கப்படுகிறது” என்றார். மாநிலம் முழுவதும் கடந்த 2022-23 மற்றும் 2024-2025 மார்ச் 25 ஆம் தேதி வரை மொத்தம் 3,969 நபர்களுக்கு நவீன செயற்கை அவயங்கள் வழங்கப் பட்டுள்ளன. விண்ணப்பம் செய்து நீண்ட நாட்களாகியும் வழங்கப்படவில்லை என்றால் உடனடியாக கவனத்திற்கு கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மக்கள் குறைதீர் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.