tamilnadu

img

நூலாற்றுப் படை -எம்.ஜே.பிரபாகர்

“ஆண் உரிமைக்கும் குரல்  கொடுக்கும் பெண்ணியம்”

கருவை சுமக்கவும், குழந்தைகளை வளர்க்கவும் வேண்டியிருந்தா லும் உடல் வலிமை இல்லாததால் பெண்கள் வீட்டு வேலைகளில் ஈடு படுத்தப்படுவதாக  நம்பப்பட்டது. இன்றைய  பாலின வேறுபாடுகள் பண்பாட்டு அறிவியலால் ஆனதே  தவிர அதற்கு வேறு எந்த இயற்கையான அறிவார்ந்த காரணங்களும் இல்லை. பெண்களுக்கான உரிமைகளை நிலைநாட்டும் சட்டங்களை இயற்று வதில் இந்தியாவில் தமிழ்நாடு முன் னோடி மாநிலமாக உள்ளது.

பெண் களுக்கு சொத்துரிமை வேண்டும் என்று தந்தை பெரியார் 1929 ஆம் ஆண்டி லேயே வலியுறுத்தினார். இன்று தமிழகத்தில் பெண்களுக்கு சொத்துரிமை சட்டம் கொண்டுவரப் பட்டுள்ளது.  இட ஒதுக்கீடு முதல் மகளிர் காவல் நிலையங்கள் உட்பட பல்வேறு துறைகளில் பெண்கள் முன்னோடியாக திகழ்ந்து வருகின்றனர்.

20 தலைப்புகளை கொண்ட இந்த நூலில் பின் கண்ட கேள்விகளுக்கு விடையளிக்கிறார் நூலாசிரியர். - ஒரு நல்ல அம்மாவாக இருக்க தனது சொந்த வாழ்க்கையை தொலை க்கும் பெண்கள் குறித்து பேசுகிறது இந்த நூல். - தனது சொந்த வீட்டில் கூட தன் வசதிக் கேற்ப உட்கார முடியாத பெண்களின் அவலத்தை பேசுகிறது. - காரணம் இல்லாமல் சந்தேகப்படும் சமூகத்தின் முன்முடிவுகள் குறித்து பேசுகிறது. - போலியான அழகுணர்ச்சி, பெண் குழந்தைகளின் வளர்ச்சியைத் தடுப்பது குறித்து அக்கறையோடு பேசுகிறது.

- பெண்களுக்கான நட்பு வட்டத்தின் அவசியம் குறித்து பேசுகிறது. - அற்பப் பெருமைகளுக்காக பெண்கள் தங்களைத் தாங்களே கூண்டில் அடைத்துக் கொள்வதையும் இந்த நூல் பேசுகிறது. - அன்றாட வாழ்க்கை யில் இப் படிப்பட்ட நிலைமை களை எதிர்கொள்ளும் பெண்களுக்கு தெளிவான அறிவார்ந்த தீர்வுகளை இந்நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் முன்வைக்கிறது. - இந்த நூலைப் படிப்பவர்களுக்கு அவர்கள் முன்னோக்கி நடை போடத் தேவையான துணிச்சலை தரும் என்பதில் ஐயமில்லை.

- படிப்பு, வேலை, சம்பாத்தியம்,  உடல் நலம்,  மனநலம்,  குழந்தை வளர்ப்பு போன்றவை குறித்து முடிவெடுக்க முடியாமல் குடும்பம்,  குழந்தைகள்,  சமுதாயம் என்று நினைத்து குழம்பிக் கொண்டிருக்கும் பெண்கள் எப்படி சிந்திக்க வேண்டும்,  எப்படி முடிவு எடுக்க வேண்டும் என்பதற்கு தேவையான,  தெளிவான ஆலோசனைகளை நூலாசிரியர் வாரி வழங்கி உள்ளார்.

பெண்களுக்குத்தான் எல்லா உரிமைகளும் இருக்குதே இன்னும் உங்க ளுக்கு என்ன வேணும்?  என்று சலிப்பாக கேட்பவர்களுக்கும்,  அடுத்த தலை முறையினரான இளம் தோழர்களுக்கும், பெண்கள் அன்றாடம் சந்திக்கும் நடை முறை பிரச்சனைகளை  இந்நூலில் சுட்டிக் காட்டுகிறார் நூலாசிரியர்.  - ஆண், பெண், மாற்று பாலினத் தவர்  என்ற பாகுபாடுகளை கடந்து எல்லோ ரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

“பெட்ரோமாக்ஸ் 
லைட்டேதான் வேணும்”
நூலாசிரியர் : கீதா இளங்கோவன்
விலை : ரூபாய் 150
வெளியீடு :  ஹெர் ஸ்டோரிஸ்
சென்னை -600004
தொடர்பு எண்: 7500098666

“வாங்க நாமும் அஞ்சல்தலை சேகரிக்கலாம்”

ஒவ்வொரு நாட்டின் தகவல் தொடர்புக்கு மிகவும் பிரதான மாக இருந்து வந்துள்ளது அஞ்சல் தலை. இன்று உள்ள அலைபேசி சேவை, இமெயில், எக்ஸ் வலைதளம், வாட்ஸ்அப் மற்றும்  சமூக வலைதளம் மூலமாக உடனடியாக தகவல் களை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் உலக அளவில் பல நூற்றாண்டு களுக்கு முன்பு அஞ்சல் மூலமே தகவல் தொடர்பு நிகழ்ந்துள்ளது என்பது வரலாறு. குறிப்பாக இந்தியாவில் 1296 ஆண்டிலேயே அஞ்சல் முறை வழக்கத்தில் இருந்து வந்துள் ளது. பெரும்பாலும் ஆரம்ப காலத்தில் அஞ்சல் காரர்கள் மூலம் தான் தகவல் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது.

அதன் பின்னர் குதிரையை பயன்படுத்தி அஞ்சல்காரர்கள் குதிரையுடன் பயணித்து தகவல் பரிமாறி வந்துள்ளனர். அக்பர் ஆட்சியில் குதிரைகளும் புத்தகங் களும் பயன்படுத்தப்பட்டுள்ளன . அப்போது தான் சாலை பணிகள் நடைபெற்றன. 1688 ஆண்டுகளில் கிழக்கிந்திய கம்பெனி வந்தவுடன் சென்னை, மும்பை, கல்கத்தா நகரங்களில் பெரிய அஞ்சல் அலுவலகங்களை ஏற்படுத்தி உள்ளனர்.

இந்த காலங்களில் மன்னர்களுக்கு இடையே யும் அந்தந்த கம்பெனி ஆட்சிப் பணிகளுக்கு மட்டுமே அஞ்சல் சேவையை பயன்படுத்தி உள்ளனர். 1744-இல் ராபர்ட் கிளைவ் வந்த பின்பு  தான் பொதுமக்களும் பயன்படுத்த அனுமதிக்கப் பட்டுள்ளனர். முதன் முதலில் இரண்டு அணா தான் கடிதங்களுக்கு கட்டணம் வசூலிக்கப் பட்டுள்ளது. (போட்டி மூலம் உருவான அஞ்சல்  தலை) அஞ்சல் தலை உருவாக்குவதற்கு 1840 ஆம் ஆண்டில் போட்டி நடத்தியுள்ளனர். அதன் மூலம் தான் அஞ்சல் தலை உருவாக்கப் பட்டுள்ளது.  உலகின் முதல் அஞ்சல் தலை 1840 மே மாதம் ஆறாம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

1856 முதல் 1926 வரை இந்தியாவிற்கான அஞ்சல் தலை லண்டன் நகரில் தான் அச்சாகி வந்துள்ளது. 1926 ஆண்டு தான் இந்தியாவில் நாசிக் நகரில் செக்யூரிட்டி பிரஸ் மூலம் அஞ்சல் தலை அச்சிட்டுள்ளனர்.

1926 ஆம் ஆண்டில் தான் இந்தியாவில் முதல் அஞ்சல் தலை வெளி யாகி உள்ளது. இந்த  அஞ்சல் தலையில் புதுதில்லி உருவாக்கப் பட்டதன் வரலாற்றை பதிவு செய்யும் விதமாக அஞ்சல் தலை  வெளியிடப்பட்டுள்ளது. 1946 உலக போரின் முடிவை குறிக்கும் வகை யில் நான்கு சிறப்பு அஞ்சல் தலை அச்சிடப் பட்டுள்ளது.  1972இல் பல வண்ண அச்சு எந்திரம் நிறுவப் பட்ட பின்பு தான் அழகிய வண்ண அஞ்சல் தலை வெளிவரத் துவங்கியுள்ளது. முதன் முதலாக 1911 இல் உலக அளவில் தபால்களை விமானம் மூலம் அனுப்பியது இந்தியா தான்

. இதுபோன்ற நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது இந்திய அஞ்சல் தலை. ஒவ்வொரு அஞ்சல்களையும் நம் நாடுகளின் கலாச்சாரங்களை, வரலாறுகளை விலங்கு களை, மதங்களை, விளையாட்டுகளை, கல்வி நெறிகளை, அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் அரசின் திட்டங்களை கொண்டதாக இருக்கும். பல்வேறு தனியார் கூரியர் நிறுவனங்கள் வந்தாலும் இன்றைக்கு இந்திய அஞ்சல் துறையின் சேவை அளப்பரியது. எனவே பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டியது நமது அவசியமாகும்.

“அஞ்சல் தலைகளின் கதை”
நூலாசிரியர் : எஸ். பி. சாட்டர்ஜி
தமிழில் மொழியாக்கம்: 
வீ. மு. சாம்பசிவன்
விலை:  ரூபாய் 45
வெளியீடு:  நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆப் இந்தியா 
சென்னை-600002
தொடர்பு எண்: 044 28252663.

குழந்தைகளுக்காக குழந்தை எழுதிய கதைகள்

கதை கேட்கும் வயதில் உள்ள குழந்தை கதை சொன்னால் எப்படி இருக்கும்? அதைவிட அந்த குழந்தை நூல் எழுதினால் எப்படி இருக்கும்? ஒன்பது வயது உள்ள குழந்தை எழுதிய நூல்தான் இது.  ஒற்றுமையே பலம்,  மயிலும் மின்மினிப் பூச்சியும், ஜீபூம்பாவும் பட்டாம்பூச்சி தோட்டமும், மண்புழுவும் நானும், பிச்சி முயலும் டாபி நாயும் எனும் ஐந்து தலைப்பு களில் கதைகளை வழங்கி உள்ளார் நூலாசிரியர்.

காட்டிலுள்ள மரங்களை வெட்டி அழித்துக் கொண்டி ருந்தவர்களை காட்டில் வாழும் பறவைகள்,

மிருகங்கள் அனைத்தும் இணைந்து ஒற்றுமையின் மூலம் மரம் வெட்டி யவர்களை துரத்துகிறார்கள். உணவு கிடைக்காது பசியில் இருந்த மயிலுக்கு,   மின்மினி பட்டாம்பூச்சி இரவில் வழிகாட்டி வயக்காட்டில் விளைந்த நெல்மணியை சாப்பிட்டு மகிழ்கிறது மயில். உழவனின் நண்பன் மண்புழு.

விடுமுறையில் கிராமத்துக்கு சென்ற குழந்தையின் கண்ணில் படுகிறது மண்புழு. நன்கு ரசிக்க தொடங்குகிறாள். சில மாதங்கள் கழித்து மீண்டும் கிராமத்துக்கு சென்ற போது பாட்டியிடம் மண்புழுவை காண வில்லை என்று கேட்டபோது பக்கத்து விவசாயிகள் பூச்சி மருந்து அடித்ததன் காரணமாக காணாமல் போயிடுச்சு என்கிறார் பாட்டி.  முயலும் நாயும் வளர்த்த போது முயல் மேல் நாய் விழுந்த தனால் முயல் செத்துப் போச்சு.

புது முயல் வாங்கியும் நாயும் முயலும் நட்பாகவே இல்லை.

 இப்படிப்பட்ட கதைகளுக்கு மிக அருமையான ஓவியமும் இந்நூலில் உண்டு. குறிப்பாக இந்த நூல் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளி வந்துள்ளது குழந்தைகள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெறும்.

“ஜீபூம்பாவும் 
பட்டாம்பூச்சி தோட்டமும்”
நூலாசிரியர் :
தி. வி. . பிரக்யுத யாழி
விலை: ரூபாய் 60.
வெளியீடு : நம் கிட்ஸ் பதிப்பகம்
Chennai-600093
தொடர்பு எண்: 9566110745