சென்னை, ஜூன் 13 - சென்னையில் கொரோனா தொற்று இல்லாத நபரை, பாதித்த நபர்களோடு ஒரே ஆம்புலன்சில் அழைத்து சென்ற விநோதம் நிகழ்ந்துள்ளது. கொரோனா தடுப்பு பணியில் மாநகராட்சி எவ்வளவு மெத்தனமாக இருக்கி றது என்பதற்கு உதாரணமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 50) கடந்த 9ந் தேதி, வடபழனியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் சென்டரில் கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து 11ந் தேதி யன்று தொற்று பாதிப்புடைய 6 பேருடன் வந்த ஆம்புலன்ஸ், சீனிவாசனையும் அழைத்துக் கொண்டு லயோலா கல்லூ ரிக்கு சென்றது. அந்த சிகிச்சை மையத்தில் இருந்த மருத்துவர்கள், ஸ்கேன் சென்டரில் செய்யப் பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், மேலும் ஒரு பரிசோதனை செய் வதாக கூறி சளி மாதிரி எடுத்துள்ளனர். இத னையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினர். அதன்படி வீட்டிற்கு வந்து தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் சீனிவாசன், தனது பரி சோதனை அறிக்கையை தரும்படி ஆர்த்தி ஸ்கேன் மையத்தை கேட்டுள்ளார். அவர்கள் அனுப்பிய அறிக்கையில் கொரோனா தொற்று இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்டதற்கு தவறு நடந்ததை ஒப்புக்கொண்டனர். இதுகுறித்து ஸ்கேன் மையத்தின் மீது சீனிவாசன் மகன் ராஜ்குமார் அளித்த புகாரை எம்ஜிஆர் நகர் காவல்நிலையத்தில் ஏற்க மறுத்துவிட்டனர். வடபழனி காவல்நிலைய எல்லைக்குள் ஸ்கேன் சென்டர் வருவதால் அங்கு சென்று புகார் செய்யும் படி கூறினர். அதன்படி, அந்த காவல் நிலையத்தில் புகாரை பெற்றுக் கொள்ளாமல் அலை கழித்து வருகின்றனர். இது தொடர்பாக ராஜ்குமார் கூறுகையில், “அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட ஸ்கேன் சென்டரில் கூடுதலாக 4 ஆயிரம் ரூபாய் வசூலித்துள்ளனர். அதற்கான ரசீதையும் வழங்கவில்லை. தவறுதலாக பரிசோதனை முடிவு வழங்கிய ஸ்கேன் சென்டர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். எங்களது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கட்டணத்தை முழுமையாக ஆர்த்தி ஸ்கேன் சென்டர் ஏற்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். “தொற்று பாதித்தவர்களை மாநகராட்சி எவ்வாறு ஒரே வண்டியில் மொத்தமாக அழைத்து செல்லலாம். தவறான தகவல் களை தரும் பரிசோதனை மையங்கள் மீது மாநகராட்சி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.