சென்னை பெசன்ட் நகரில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ என்ற நடை பயிற்சி திட்டத்தை மாநில இளை ஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை (நவ.4) தொடங்கி வைத்து கொட்டும் மழையில் நடை பயிற்சி மேற்கொண்டார்.
தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இதில், அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள், ஆட்சியர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
சென்னை பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், மக்களவை உறுப்பினர்கள் தமிழச்சி தங்க பாண்டியன், கனிமொழி சோமு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மயிலை த.வேலு, பிரபாகர்ராஜா, கணபதி, மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்று நடைபயிற்சி மேற்கொண்டனர்.