சென்னை,நவ.24- தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, கடந்த 2006-2011 ஆம் ஆண்டுக ளில், கனிமவளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டத் தில் செம்மண் குவாரி யில் அதிக அளவில் செம்மண் எடுத்த தன் மூலம், அரசுக்கு ரூ. 28 கோடியே 36 லட்சத்து40 ஆயிரத்து 600 இழப்பு ஏற்படுத்தி யதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜ மகேந்திரன் உள்ளிட்டோர் மீது, 2012 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு காவல் துறை வழக்குப்பதிவு செய்தது. விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், அமலாக்கத் துறையினர், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகா மணி தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூலையில் சோதனை நடத்தி னர். சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனைகளை தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி யும், சென்னையில் உள்ள அமலாக் கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக் கப்பட்டார்.
இந்தச் சூழ்நிலையில், இந்த சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக, அமைச்சர் பொன்முடி யின் மகனும் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யுமான கவுதம சிகாமணி, கே.எஸ். ராஜ மகேந்திரன், வி.ஜெயச்சந்திரன், கே. சதானந்தம், கோபிநாத் மற்றும் கே.எஸ். பிஸ்னஸ் ஹவுஸ் நிறு வனம் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக அமலா க்கத்துறை சார்பில் ஆகஸ்ட் சென்னை முதன்மை செசன்சு நீதி மன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை 12 -வது கூடுதல் செசன்சு நீதிமன்றத்திற்கு மாற்றப் பட்டது. இதையடுத்து இந்த வழக்கு கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது கவுதம சிகாமணி எம்.பி, கே.எஸ். ராஜ மகேந்திரன், வி.ஜெயச்சந்திரன், கே. சதானந்தம், கோபிநாத் உள்ளி ட்டோர் நேரில் ஆஜராகி இருந்தார்.
பின்னர் அவர்களுக்கு குற்றப்பத் திரிகை நகல்கள் வழங்க நீதி பதி உத்தரவிட்டார். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்தி ரிகை நகல் வழங்கப்பட்டது.இதை யடுத்து வழக்கு விசாரணை நீதி பதி டிசம்பர் 22ஆம் தேதி தள்ளி வைத்தார்.
அமைச்சருக்கு சம்மன்
இந்த நிலையில், சட்ட விரோத பண பரிவர்த்தனை புகார் தொடர்பாக வரும் 30 ஆம் தேதி நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடிக்கு அமலா க்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.