ஒட்டன்சத்திரம், மார்ச் 24- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சி தானந்தத்திற்கு ஆதரவாக ஒட்டன்சத்திரம் பகுதியில் கிராமம் கிராமமாக சென்று கொ ளுத்தும் வெயிலிலும் ஞாயி றன்று அமைச்சர் அர.சக்கர பாணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திண்டுக்கல் மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர். சச்சிதானந்தத்திற்கு ஆதரவாக ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரங்க நாதபுரம், லெக்கையன் கோட்டை, சாலைப்புதூர், சத்தியநாதபுரம், அத்திக் கோம்பை, காளாஞ்சிபட்டி, வெரியப்பூர், பழைய பட்டி, திப்பம்பட்டி, நவா லூற்று, கோடாங்கிபட்டி, புளியமரத்துக்கோட்டை, கல்லுப்பட்டி, முத்துநாயக் கன்பட்டி, புலியூர்நத்தம், பெரியகுளிப்பட்டி, ஜவ்வாது பட்டி ஆகிய கிராமங்களில் ஞாயிறன்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கர பாணி அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசு கையில், ‘‘தமிழ்நாடு முதல் வர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளிய மக்களுக்காக தமிழ கத்தில் பொற்கால ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கரூர் காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டம் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் நிறைவேறினால் 30 ஆண்டு காலத்திற்கு குடி நீர் பிரச்சனையே இல்லாத நிலை ஏற்படும்.
ஒட்டன் சத்திரம் மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் அரசு இடங்கள் கண்டறியப்பட்டு, ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டுவதற்கு வீட்டுமனையு டன் கூடிய பட்டா வழங்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் வேட்பாளர் ஆர்.சச்சி தானந்தத்திற்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின் னத்தில் வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்’’ என்று கூறினார்.
வேட்பாளர் ஆர்.சச்சிதா னத்தம் பேசுகையில், ‘‘மத்தி யில் ஆளும் மோடி தலைமை யிலான அரசு கிராமப்பகுதி யில் ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வரும் 100 நாள் வேலையை நிறுத்தப் பார்க்கிறார்கள். ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 100 நாள் பணிக்கு தினக்கூலி யாக ரூ.400 வழங்கப்படும்’’ என்றார்.
வாக்கு சேகரிப்பின் போது திமுக மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, ஒட்டன்சத்திரம் ஒன்றிய செயலாளர்கள் ஜோதிஸ்வ ரன், தர்மராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் சிவமணி, விவ சாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் கருணாகரன், சிஐ டியு தொழிற்சங்க ஒருங்கி ணைப்பாளர் முருகேசன், தோழமை கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதி கள் உள்ளிட்டோர் பங்கேற்று வாக்கு சேகரித்தனர்.