சென்னை, ஜூலை 5 - பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட உள்ளதாக தமி ழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் மீன், பால்வளம், கால்நடைத் துறை ஆகிய மானிக்கோரிக்கை கள் மீது வெள்ளியன்று (ஜூலை 5) நடைபெற்றது. இதன்மீது நடை பெற்ற விவாதம் வருமாறு:
கே.பி.பி.சாமி (திமுக): 5 வருட
மாக உயர்த்தப்படாமல் உள்ள பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
முதலமைச்சர்: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலையை உயர்த்த அரசு தயாராக உள்ளது. இந்த சட்டமன்ற கூட்டத் தொடர் முடிவதற்குள் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். அதேசமயம் நுகர்வோருக்கும் விலை உயர்த்தப்படும். அப்போது எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தக்கூடாது என்றார்.
கே.பி.பி.சாமி: இலவசஅரிசி தருவதுபோல், இழப்பை அரசு ஏற்றுக்கொண்டு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். கொசத்தலை ஆற்றின் முகத் துவாரத்தை தூர்வார வேண்டும்.
முதலமைச்சர்: கொசத்தலையாற்றின் (எண்ணூர்) முகத்துவாரத்தில் தூண்டில் வளைவு அமைக்க அரசு ஆய்வு செய்து வருகிறது.
தடைக்காலத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை
கே.பி.பி.சாமி: மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 - ஜூன் 15 என்றுள்ளது. வடகிழக்கு பருவமழை பொழியும் காலமான அக்.15 - டிசம்பர் 15 என மாற்றி அமைக்க வேண்டும். இதனால் இயற்கை சீற்றத்திலிருந்து மீனவர்கள் பாதுகாக்கப்படு வார்கள்.
அமைச்சர் டி.ஜெயக்குமார்: மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு கடற்கரையோர மாநிலங்கள் ஒன்று கூடி
ஆலோசித்து மீன்பிடி தடைக் காலம் அமல்படுத்தப்பட்டது. இதனை தமிழக அரசு மட்டும் மாற்றி அமைக்க முடியாது. எனவே, மத்திய அரசு மூலம் கடற் கரையோர மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு அந்த விவாதம் நடைபெற்றது.