tamilnadu

img

மெட்ரோ ரயில் நிலையங்கள்: ரூ.1,817 கோடியில் ஒப்பந்தம்

சென்னை,அக்.14- சென்னை மாதவரம்-சோழிங்க நல்லூர் இடையே மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்கு ரூ.1,817  கோடியில் ஒப்பந்தம் செய்து கொள்ளப் பட்டுள்ளது. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63 ஆயிரத்து 246 கோடி யில் 118.9 கி.மீ. தொலைவுக்கு மாதவரம்  பால் பண்ணை - சிறுசேரி சிப்காட்,  கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பணி மனை, மாதவரம் - சோழிங்கநல்லூர் ஆகிய வழித்தடங்களில் அமைய உள்ளது. ஆரம்பகட்ட பணியாக தற்போது சுரங்கம் தோண்டும் பணி கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் வழித்தடம் 5-ல்  மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே  ரூ.1,817 கோடியே 54 லட்சம் செலவில்  மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்ப தற்கு டாடா திட்ட நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது. சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் தலைமை அலுவல கத்தில் நடந்த நிகழ்ச்சியில், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் அர்ச்சுனன் (திட்டங்கள்) மற்றும் டாடா திட்ட நிர்வாக துணைத் தலைவர் ராமன் கபீல் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அப்போது, மெட்ரோ ரயில் நிலைய உயர் அதிகாரி கள் உடனிருந்தனர். இந்த ஒப்பந்தம் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கியின் நிதியுதவி யின் ஒரு பகுதியாகும். வழித்தடம் 5-ல் கொளத்தூர் சந்திப்பு மெட்ரோ, சீனிவாச நகர் மெட்ரோ, வில்லிவாக்கம் மெட்ரோ, வில்லிவாக்கம் பேருந்து நிலைய முனையம் மெட்ரோ மற்றும் வில்லிவாக்கம் எம்.டி.எச். சாலை மெட்ரோ என 5 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்ப தற்கு, கொளத்தூர் சந்திப்பு முதல் வில்லி வாக்கம் எம்.டி.எச். சாலை வரை  இரட்டை துளையிடப்பட்ட சுரங்கங்கள்,  பாதைகள், சாய்வுப் பாதைகள் அமைப்ப தற்கான பணிகள் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தில் 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. நீளத்தில்  கட்டுமானம் மற்றும் தடம் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் 100 விழுக்காடு நிறைவுபெற்றுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.