tamilnadu

img

விம்கோ நகரில் இருந்து எண்ணூர் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்கப்படும் வடசென்னை பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து கொளத்தூர் மாதவரம் நெடுஞ் சாலை, ஆர்.கே.நகர் தண்டையார்பேட்டை சுங்கச்சாவடி என  இரண்டு மையங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செவ்வாயன்று (ஏப். 2) பிரச்சாரம் செய்தார்.

வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து கொளத்தூர் மாதவரம் நெடுஞ் சாலை, ஆர்.கே.நகர் தண்டையார்பேட்டை சுங்கச்சாவடி என  இரண்டு மையங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செவ்வாயன்று (ஏப். 2) பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், திமுக ஆட்சி பொறுப் பேற்றதற்கு பின் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், மகளிர் உரிமைத் தொகை, 3 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ள புதுமைப் பெண் திட்டம், ஏழை மாணவர்களின் கல்வி தடைபடக் கூடாது என்பதற்காக 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டித்  திட்டம் இப்படி பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி யுள்ளது. காலை சிற்றுண்டித் திட்டத்தை பல மாநிலங்களில்  அமல்படுத்த தொடங்கியுள்ளனர் என்றார்.

வடசென்னையில் செய்த பணிகள்
வடசென்னை வடக்கு பகுதியை (கொளத்தூர், திருவிக  நகர், பெரம்பூர்) மேம்படுத்தும் விதமாக ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஐசிஎப் கொளத்தூர் பகுதியை இணைக் கும் வகையில் ரூ.62 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 

வேலைவாய்ப்பு
கொளத்தூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமின் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். கொளத்தூர் காமராஜ் நகரில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். 

நிறுவன சமூக பொறுப்பு நிதி
சென்னை காமராஜர் துறைமுகத்தின் நிறுவன சமூக பொறுப்பு நிதி ரூ.162 கோடியே 85 லட்சம்  குஜராத் மாநிலத்திற்கு செல்வதை தடுத்து வடசென்னை மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளப் பட்டன. எண்ணூர் நெட்டு குப்பத்தில் ரூ. 150 கோடி மதிப்பீட்டில் முகத்துவாரத்தை தூர்வாரி அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொருக்குப்பேட்டை எழில் நகர் பகுதியில் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ. 106 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியும், ரூ. 6 ஆயிரத்து 380 கோடி மதிப்பீட்டில் எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை காமராஜர் துறைமுகத்தின் நிறுவன சமூக பொறுப்பு நிதி ரூ.162 கோடியே 85 லட்சம்  குஜராத் மாநிலத்திற்கு செல்வதை தடுத்து வடசென்னை மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளப் பட்டன. எண்ணூர் நெட்டு குப்பத்தில் ரூ. 150 கோடி மதிப்பீட்டில் முகத்துவாரத்தை தூர்வாரி அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொருக்குப்பேட்டை எழில் நகர் பகுதியில் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ. 106 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியும், ரூ. 6 ஆயிரத்து 380 கோடி மதிப்பீட்டில் எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வாக்குறுதிகள்

விம்கோ நகரில் இருந்து எண்ணூர் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்கப்படும். வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து தெற்கு பக்கம் செல்வதற்கு கொளத்தூர் ராஜாஜி  நகரில் சுரங்க நடைபாதை அமைக்கப்படும். 140 கோடி  ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கணேசபுரம் மேம் பாலப் பணியை விரைந்து முடிக்கவும், கொடுங்கையூரில் இரண்டு குப்பை கொட்டும் வளாகங்களை 640 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வடசென்னையில் மாசு கட்டுப் பாடு வாரியம் அமைக்கப்படும். மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பட்டா
சென்னையின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் பட்டா பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.  குறிப்பாக ஏரி பகுதியில் வசிப்போர் பட்டா பெறமுடியாத  நிலை உள்ளது. இதை சரி செய்யும் வகையில் அமைச்சர் களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல்  முடிந்த பிறகு வீட்டு மனை பெற்ற அனைவருக்கும் பட்டா  வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

வடசென்னையின் வளர்ச்சிக்கும், இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பதற்கும் கலாநிதி வீரா சாமியை குறைந்தபட்சம் 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத் தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

இந்த பிரச்சாரத்தில் அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், தாயகம் கவி, ஜே.ஜே.எபிநேசர், ஐட்ரீம் மூர்த்தி, கே.பி.சங்கர், மேயர் ஆர்.பிரியா,  காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், டில்லிபாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்  செயலாளர் எல்.சுந்தர்ராஜன், சிபிஐ மாவட்டச் செயலாளர் த.கு.வெங்கடேஷ் வேம்புலி, மதிமுக மாவட்டச் செயலாளர்  சு.ஜீவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண்டனர்.