tamilnadu

img

சொத்து வரியை உயர்த்துவதா?சென்னை மாநகராட்சியில் சிபிஎம், சிபிஐ, விசிக வெளிநடப்பு

சென்னை, செப். 27 - சென்னையில் சொத்து  வரி மற்றும் அபராதக் கட் டணம் உயர்த்தப்பட்டி ருப்பதற்கு எதிர்ப்பு தெரி வித்து மாநகராட்சி கூட்டத்தி லிருந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பி னர்கள் வெளிநடப்பு செய்த னர்.

குரல் வாக்கெடுப்பு

பெருநகர சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் வெள்ளியன்று (செப்.27) ரிப்பன் மாளிகையில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில், தனியார் சுடுகாட்டிற்கு அனு மதி அளிக்கும் தீர்மானத்தை மேயர் ஆர். பிரியா கொண்டு வந்தார். அப்போது, இந்த தீர் மானத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சிபிஎம், விசிக, சிபிஐ உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதனை ஏற்க மறுத்த மேயர் ஆர்.  பிரியா, தனியார் சுடுகாட்டிற் கான தீர்மானம் மட்டுமன்றி, வீட்டுவரி, சொத்துவரி, அபராதக் கட்டணம்  உயர்வுக்கான தீர்மானங்கள் அனைத்தை யும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறை வேற்றினார். இதனால் ஆவேசமடைந்த சிபிஎம், சிபிஐ, விசிக உறுப்பினர்கள் 9 பேரும், மாமன்றக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஆர். ஜெயராமன் பேட்டி

அதன்பின் செய்தியாளர்களிடம் சிபிஎம் மாமன்றக் குழுத் தலைவர் ஆர். ஜெயராமன் கூறியதாவது:

2022-ஆம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தொழில் வரி, தொழில் உரிமக் கட்ட ணத்தை உயர்த்தினார்கள். பிறகு, குப்பை  மற்றும் கட்டடக் கழிவுகளை பொது இடங் களில் கொட்டினால் அபராதம், சொத்து வரி கட்டத் தவறினால் அபராதம் என தொடர்ச்சியாக வரிகளை உயர்த்திக் கொண்டே செல்கிறார்கள். மறுபக்கம், குப்பை அள்ள தனியாரை கொண்டு வந்து நிரந்தர பணியாளர்களை இல்லாமல் செய்துவிட்டனர். 

சுடுகாடுமா தனியார்மயம்

தற்போது, தனியார் சுடுகாடு அமைக்க  அனுமதி தரப்படுகிறது. தனியார் சுடு காட்டை கொண்டு வந்து எதிர்காலத்தில் மாநகராட்சி சுடுகாடு, மயானமே இல்லா மல் செய்து விடுவார்கள். தனியார் மயா னம் தொடங்க ஒரு சென்ட் நிலத்திற்கு 500 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும். 50 சென்ட் நிலத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் பணம் கட்டி யார் வேண்டுமானாலும் சுடுகாடு அமைக்க முடியும். இதனால் சாதி, மத அமைப்புகள் சுடுகாடு தொடங்குவார்கள்; தேவையற்ற சச்சரவுகள் எழும். அடக்கம், தகனம் செய்ய கட்டணம் எவ்வளவு என்று நிர்ணயிக்கவில்லை.

உழைக்கும் மக்களைப் பாதிக்கும்

2022-ஆம் ஆண்டு சொத்துவரியை 6 விழுக்காடு உயர்த்தினார்கள். தற்போது தமிழ்நாடு அரசின் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் சொத்துவரியை 6 விழுக்காடு தானாகவே உயரும் வகையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் நிர்பந்தத்தால் இதனை செய்வதாக கூறுகின்றனர். 

சாலையில் குப்பையை வீசினால் விதிக்கப்படும் அபராதம் 100 ரூபாயி லிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது. அனுமதி பெற்று கட்டடம் கட்டி னால், பொருட்களை எங்கே கொட்டி வைப்பார்கள்? கட்டடக் கழிவுகளை எங்கே கொண்டு சென்று எங்கே கொட்டுவார்கள். கட்டடம் கட்ட வீட்டின் முன்பு பொருட் களை வைத்தால் விதிக்கப்படும் அப ராதத்தை 2 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி உள்ளனர். இதனை ஏற்க முடியாது.

இதனை எதிர்த்து, அதிமுக, பாஜக வெளிநடப்பு செய்யவில்லை. உழைக்கும் மக்களை கடுமையாக பாதிக்கக் கூடிய இவைகளை எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம். 

இவ்வாறு அவர் கூறினார்.