சென்னை, மார்ச் 19- பிரதமர் நரேந்திர மோடி ஐந்து முறை அல்ல, 50 முறை வந்தாலும் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் மதிமுக சார்பில் திருச்சியில் போட்டியிடும் கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சென்று, முதல்வர் ஸ்டாலினை வைகோ சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். “தமிழக முதல்வர் ஸ்டா லின் திராவிட இயக்கத்துக்கு அண்ணா காலத்திலிருந்து கோட்டையாக இருந்த திருச்சியை மதிமுகவுக்கு ஒதுக்கி கொடுத்திருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி ஐந்து முறை அல்ல, 50 முறை தமிழகத்துக்கு வந்தாலும் திராவிடத்தின் பிடியிலிருந்து விடுவிக்க முடியாது, அவர் எதையோ நினைத்துக் கொண்டு எதையோ பேசு கிறார். ‘மேரா பாரத் மேரா பரி வார்’ என்று ஒவ்வொரு இடத் திலும் கூச்சலிட்டார்.
அப்படி யென்றால் இந்தியா என்பது அவருடைய பரிவாரம். அவ ரின் அமைப்பில் இருந்த பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார் கள். இம்முறை மதிமுக திருச்சியில் மிகப்பெரிய வெற்றி பெறும். தமிழகத்தி லும், புதுச்சேரியிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். இதை மக் கள் பார்க்கதான் போகிறார் கள்” என்றார்.