tamilnadu

img

எம்.சி.ராஜா விடுதி வளாகத்தில் ரூ.44.5 கோடியில் கூடுதல் கட்டிடம்

சென்னை,மே3  சென்னை  நந்தனத்தில் உள்ள  எம்.சி.ராஜா விடுதியில், ஆண்டுக்கு 485 மாணவர்கள் கூடுதலாக தங்கி பயிலும் வகையில் 10 மாடிகள் கொண்ட பிரம் மாண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.    கிராமங்களில் இருந்த மாணவர்கள் நகரங்களுக்கும், சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு வந்தும் உயர் கல்வி பெறத் தொடங்கினர். கல்லூரி களில் சேரும் ஆதிதிராவிட மாணவர் கள் தங்குவதற்காகஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் விடுதிகள் தொடங்கப்பட்டன. சென்னையில் மட்டும் 24 ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகள் செயல்படுகின் றன. இவற்றில் 3 விடுதிகள் வாடகை கட்டிடத்திலும் 21 விடுதிகள் சொந்த கட்டிடத்திலும் இயங்குகின்றன. இத்தகைய விடுதிகளில் ஒன்றாக 1961ஆம் ஆண்டு சைதாப்பேட்டை நந்தனத்தில் எம்.சி.ராஜா ஆதிதிரா விடர் நல கல்லூரி மாணவர் விடுதி கட்டப்பட்டது.

ஆதிதிராவிடர் நல விடுதிகள் முறை யாக பராமக்கப்படுவதில்லை, அடிப்படை வசதிகள் கூட செய்து தரப் படுவதில்லை. மாணவர்கள் தங்கி பயில்வதற்கான சூழல் இல்லா மல் உள்ளது. தரமான உணவுகள் வழங்கப்படுவதில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உள்ளது. எம்.சி.ராஜா விடுதியும் பராமரிப்பின்றி உள்ளது, உணவு சரியில்லை என அவ்வப் போது மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இது தொடர்பாக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் விடு தியை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல்செய்யவும் உத்தரவிட்டது. 

“சென்னையில் உள்ள பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பொறியியல், தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் துறைகளில் பயின்று வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்கு டியின மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வரு கிறது. அரசு செயல்படுத்தும் திட்டங் கள், படிப்பறிவு விகிதம் அதிகரிப்பு, சமூக வளர்ச்சியின் காரணமாக உயர்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் மாணவர்கள் குவிவதை தவிர்க்க முடியவில்லை.

இந்த மாணவர்களுக்கு விடுதி களில் இடம் கிடைப்பது சிரமமாக உள்ளது. தங்க இடம் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோருக்கு இடம் கிடைப் பதில்லை. இதனால் பொருளா தாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகின்றனர். சென்னையில் கூடுதலான விடுதிகளை திறக்க வேண்டும். தற்போதுள்ள விடுதிகளை மேம்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து போராடி வரு கிறது.

நவீன வசதிகளுடன் விடுதி 
 இந்த நிலையில், 2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்த நிதியமைச்சர், “சென்னை நந்தனம் எம்.சி.ராஜா கல்லூரி விடுதி வளாகத்தில், காலியாக உள்ள இடத்தில் சுமார் 75 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 6 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய மாணவர் விடுதி ரூ.40 கோடி செலவில் கட்டப்படும்” என்றார். 

இதனையடுத்து விடுதி வளா கத்தை ஆய்வு செய்த ஆதிதிராவிடர் நலத்துறை, ரூ.44.50 கோடி மதிப் பீட்டில், ஒரு லட்சத்து ஆயிரத்து 101 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 10 மாடி கொண்ட கூடுதல் விடுதி கட்டிடம் கட்ட அரசாணை வெளி யிட்டது. இந்த விடுதி கட்டுமானமான பணிகளை 2023 ஜூலை மாதம் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த பிரம்மாண்ட கட்டிடம் 121 தங்கும் அறைகள் கொண்டதாகவும், 484 மாணவர்கள் தங்கி பயிலும் வகை யில் அமைக்கப்படுகிறது. நூலகம், உடற்பயிற்சிக் கூடம், பார்வையாளர் அறை, பன்னோக்கு அரங்கம் ஆகிய நவீன வசதிகளுடன் கூடியதாகவும் கட்டப்படுகிறது. இந்த கூடுதல் கட்டி டம் பயன்பாட்டிற்கு வரும் போது,  ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக் கான மாணவர்கள் பயனடைவார்கள்.