பள்ளிக்கரணையில் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் பிரவீனின் மனைவி ஷர்மிளா மற்றும் குடும்பத்தினரை, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் பி. சுகந்தி, மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, மாநில பொதுச்செயலாளர் அ. ராதிகா, பொருளாளர் ஜி. பிரமிளா, தென்சென்னை மாவட்ட செயலாளர் சித்ரகலா ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சட்ட ரீதியான உதவிகளை செய்யத் தயாராக இருக்கிறோம் என்று கூறியதுடன், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கான தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் உறுதியளித்தனர்.