சென்னை, நவ.21- திரைக் கலைஞர் திரிஷா மற்றும் திரை உலக பெண்களை மிக மோசமாக பேசிய மன்சூர் அலிகான் மீது தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, பொதுச் செயலாளர் அ. ராதிகா ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:-
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் யூடியூப்பில் அளித்த பேட்டியில் திரைக் கலைஞர் திரிஷா குறித்து மிக மோசமாக பேசியுள்ளார். திரிஷா மட்டுமல்லாது திரை உலகில் உள்ள பெண்களை இழிவுபடுத்துவதாக பேசியிருக்கிறார். பெண்களை கண்ணிய குறைவாக நடத்துவது, பேசுவது என்பதை வன் மையாக கண்டிக்கிறோம். திரையுலகில் பல்வேறு சிரமங் களுக்கு இடையில் பெண்கள் சாதித்து வருகின்றனர். நகைச்சுவைக்காக பேசுகிறோம் என்று சொல்லி இரட்டை அர்த்தத்தில் பேசுவது, பாலியல் ரீதி யாக கொச்சைப்படுத்தி பேசுவது என்பதை ஏற்க முடியாது.
சமூக வலைதளங்களில் கடுமை யான கண்டனங்கள் எழுந்த பிறகு மன்சூர் அலிகான் வருத்தம் தெரிவிக் காதது கண்டிக்கத்தக்கது. நீங்கள் சொல்லும் கருத்துக்கள் எளிதில் சென்ற டையக் கூடிய வாய்ப்பு இருக்கும் திரைப்பட நடிகர்கள் பேசுகிறபோது அதன் பொறுப்பை உணர்ந்து செயல் பட வேண்டும்.
பெண் என்றாலே நுகர்வு பொருள் என்ற ஆணாதிக்க சிந்தனையின் உச்ச மாக மன்சூர் அலிகான் பேச்சு இருக்கி றது. இப்பிரச்சனையில் பாதிக்கப் பட்டிருக்கும் திரிஷாவுடன் மாதர் சங்கம் துணை நிற்கிறது.
எனவே, தமிழ்நாடு காவல்துறை மன்சூர் அலிகான் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி செய்யும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும். இதை உறுதிப்படுத்தும் வகையில் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க மும் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்திருக் கிறார்கள்.