tamilnadu

img

தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்  

தமிழகத்தில் பொதுஇடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படுவதில்தான் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் பதற்றமான சூழல் இல்லை என தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் என்ற முறையே விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனவே பொதுஇடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற நடவடிக்கைக்களை பின்பற்ற வேண்டும் என்று இவ்வாறு கூறினார். 

;