tamilnadu

img

தோழர் பி.என். உண்ணி மறைவு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

சென்னை, ஜன.9- தோழர் பி.என்.  உண்ணி மறை வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்  குழு இரங்கல் - புக ழஞ்சலி செலுத்தி யுள்ளது. இதுதொடர் பாக மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்  ணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்ப தாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட சென்னை மாவட்டக்குழுவின் மூத்த தலை வர்களில் ஒருவரும், தன்னலமற்ற தொழிற்  சங்கவாதியுமான அன்புத் தோழர் பி.என்.  உண்ணி அவர்கள் உடல்நலம் பாதிக்கப் பட்டு இன்று (ஜன.9)சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற  செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனை யையும் அளிக்கிறது.

அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்  நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்  கலை தெரிவிப்பதுடன், புகழஞ்சலியை செலுத்துகிறது. தோழர் பி.என். உண்ணி கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பிறந்தவர்.

தனது  பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே இருந்த ரயில்வே  கேன்டீனில் தொழிலாளியாக பணியாற்றி யவர். பிறகு அம்பத்தூரில் சன்மார்க்  குழுமத்தின் ராக்வெல்டு தொழிற்சாலையில்  பணியாற்றியபோது அங்கு தொழிற்சங் கத்தை அமைத்து தொழிலாளர்களை திரட்டி தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், நலன்களுக்காகவும் பல்வேறு போராட் டங்களை முன்னெடுத்தவர். சிறந்த தொழிற் சங்கவாதியாக திகழ்ந்த தோழர் உண்ணி அம்பத்தூர் எஸ்டேட் எம்ப்ளாயிஸ் யூனி யனின் கமிட்டி உறுப்பினராக, பொருளாள ராக, பொதுச்செயலாளராக, தலைவராக திறம்பட பணியாற்றியவர்.

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக தேர்ந்  தெடுக்கப்பட்டு அம்பத்தூர் - ஆவடி பகு திக்குழு செயலாளராகவும், 1983-ஆம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராக, பிறகு மாவட்டச் செயற்குழு உறுப்பினராக, சிஐடியு வடசென்னை மாவட்டப் பொருளா ளராக- செயலாளராக- தலைவராக, அகில இந்திய பொதுக்குழு உறுப்பினராக திறம்பட செயல்பட்டவர். தற்போதுவரை டேப்லெட் இந்தியா தொழிற்சங்க தலைவராக செயல்  பட்டு வந்தவர்.

உழைக்கும் தொழிலாளர் களின் நலன்களுக்காக தனது இறுதி மூச்சு  வரை தன்னை அர்ப்பணித்துக் கொண்டு  அயராது போராடியவர். அவரது மனைவி  கட்சியின் ஊழியராக செயல்பட்டவர். அவ ரது குடும்பமே கட்சி குடும்பமாக உள்ளது.

அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், சிஐடியு சங்கத்திற்கும், உழைக் கும் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட பேரி ழப்பாகும். அவரது மறைவால் துயருற்றுள்ள அன்னாரது மனைவி மற்றும் குடும்பத்தி னருக்கும், வடசென்னை மாவட்ட தோழர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில  செயற்குழு தனது இரங்கலையும், அனு தாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்  டுள்ளார்.