சென்னை, ஜூன் 10 - ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகள், குடியிருப்புகளை அகற்றும் மாநில அரசின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி 10 நாள் மக்கள் சந்திப்பு இயக்கத்தை இன்று (வெள்ளிக்கிழமை) தென்சென்னை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி உள்ளது.
இதன் ஒருபகுதியாக கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தரமணியில் துண்டு பிரசுரம் கொடுத்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், வேளச்சேரி பகுதிச் செயலாளர் எஸ்.முகமதுரஃபி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.