tamilnadu

செய்தியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

காஞ்சிபுரம், மே 19 - காஞ்சிபுரத்தில் நியூஸ் ஜே தொலைக்காட்சியின் மாவட்ட செயலாளராக இருப்பவர் லட்சுமிகாந்தன் (51). இவரை பஞ்சுப்பேட்டை பகுதியில் உள்ள ரேசன் கடையிலிருந்து பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டிய அரிசி கடத்தல் தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தார். இந்நிலையில் மெக்கானிக் அன்பு என்பவர், லட்சுமிகாந்தன வீடுட்டிற்கு சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து லட்சுமிகாந்தன் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பிணையில் வெளியே வரமுடியாத பிரிவுகளில் வழக்குப் பதிந்து அன்புவை காவல்துறையினர் கைது செய்தனர்.