tamilnadu

img

மலேசியாவை காண வாருங்கள் தென்னிந்தியாவில் பிரச்சாரம் துவக்கம்

 சென்னை,செப்.23- மலேசிய சுற்றுலாத் தலங்களை தென்னிந்தியாவில் பிரபலப்படுத்த மலேசிய சுற்றுலா மற்றும் பயண முகவர்கள் சங்கம் டூரிசம் மலேசியா உதவியுடன் தென்னிந்தியாவின் நான்கு நகரங்களை உள்ளடக்கிய அதாவது சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் கொச்சியில் விசிட் மலேசியா 2020 பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலேசியாவின் துணைத் தூதர் சரவணன் காரதிஹயன், மலேசியாவின் சுற்றுலாத்துறை மூத்த இயக்குநர் மொஹமட் டைப் இப்ரா`ஹிம், தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கான சுற்றுலா மலேசியாவின் துணை இயக்குநர் லோகிதாசன் தனராஜ், மட்டாவுக்கான  சிலாங்வூர் அத்தியாயத்தின் தலைவர் கோபாலன்மரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மலேசியாவுக்கு வருகைதரும் இந்திய பயணிகளில் அதிகமானோர் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் என்று மலேசியாவின் துணைத் தூதர் சரவணன் காரதிஹயன் கூறினார். மொத்தம் 3லட்சத்து 54 ஆயிரத்தி 486 மலேசியாவிற்கு வருகை தந்துள்ளனர். சிங்கப்பூர் இந்தோனேசியா சீனா தாய்லாந்து புருனே இந்தியா தென் கொரியா நாடுகளில் இருந்து அதிகமானேர் மலேசியா சுற்றுலாத்தலங்களைகாண வருகை தருகிறார்கள் என்றார் அவர்.