போர் போட்டால் ரூ. 200 கல்லா கட்டும் அம்பத்தூர் காவல்துறையினர்
சென்னை, ஜூன் 17- சென்னையில் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் ஏரிகள் வறண்ட நிலையில் மக்கள் குடிநீருக்காக அல்லல்பட்டு வருகின்றனர் ஒருபக்கம் தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதாக சொன்னாலும் மறுபக்கம் தமிழக காவல்துறையினர் தங்கள் வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர் சென்னை அம்பத்தூரில் அமைந்துள்ள மேனாம்பேடு பாரத் நகர் பகுதியில் கிணற்றில் தண்ணீர் வற்றியதால் போர் போட்டு தண்ணீர் எடுக்க அந்த பகுதியை சார்ந்த ஒரு வீட்டில் முடிவு செய்துள்ளனர் அதற்காக போர் போட்டு தண்ணீர் எடுக்கும் பணியை செய்தனர். அப்போது ஒரு காவலர் நேரடியாக வந்து போர் போடும் இடத்தை பார்த்தார் பிறகு அருகிலிருந்த போர் போடும் தொழிலாளர்களிடம் யார் மேனேஜர் என்று கேட்டார். அவர் இங்கு இல்லை என்றவுடன் போர் போடும் தொழிலாளர் மூலம் போர் ஏஜென்சி ஆபீசுக்கு போன் செய்து பேசிய பிறகு டிரைவர் கிட்ட வாங்கித்தா இல்லனா போர் போடும் பார்ட்டிகிட்ட ( போர் போடும் பகுதியை சார்ந்தவர்) வாங்கி கொடு என்றார். இப்படியாக அம்பத்தூர் பகுதி முழுவதும் போர் போடும் இடங்களில் தலா ஒரு இடத்திற்கு 200 ரூபாய் வீதம் வசூல் வேட்டையில் அம்பத்தூர் காவல் துறையினர் இறங்கியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நகை, பணம் கொள்ளை
சென்னை, ஜூன் 16- மாதவரம் காவல் நிலையம் அருகே காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் செம்பியம், மாதவரம், புழல், செங்குன்றம் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் வசிக்கின்றனர். பெரம்பூர் செம்பியம் போக்குவரத்து காவல் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக வேலை செய்பவர் கோதண்ட பாணி. இவர் காவலர் குடியிருப்பின் ஏ பிளாக்கில் முதல் தளத்தில் வசிக்கிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு திருச்செந்தூருக்கு சென்றிருந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை வீடு திரும்பிய அவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டி ருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 சவரன் நகைகள், 10 ஆயிரம் ரூபாய் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மாதவரம் காவல் நிலையத்தில் கோதண்டபாணி புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் நிலையம் அருகிலேயே காவலர் குடியிருப்பில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.