மெட்ரோ குடிநீர் கட்டணம் அதிகரிப்பு
சென்னை, அக். 18- சென்னையில் லாரிகள் மூலம் வீடுகளுக்கு வழங்கப்படும் தண்ணீர் கட்டணம் 5 விழுக்காடு உயர்த்தப்பட்டிருக்கிறது. சென்னையில் வசிக்கும் மக்களுக்கு குழாய் வழியாக வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. குடிநீர் குழாய் மூலம் விநியோகம் செய்ய முடியாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் இலவசமாக தண்ணீர் வழங்கப்படுகிறது. இதுதவிர அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றிற்கு லாரிகள் மூலம் குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது. குடிநீர் தேவைப்படு வோர் ஆன்லைனில் பதிவு செய்தால் 24 மணி நேரத்தில் தற்போது வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆன்லைனில் பதிவு செய்யும் போதே அதற்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும். 6 ஆயிரம் லிட்டர், 9 ஆயிரம் லிட்டர், 12 ஆயிரம் லிட்டர் என தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் லாரி தண்ணீருக்காக மக்கள் திண்டாடினார்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத நிலையில் இருந்தது. ஒரு மாதம் வரை பதிவு செய்து காத்திருந்த நிலையும் காணப்பட்டது. இந்நிலையில் சென்னையில் லாரி தண்ணீரின் கட்டணம் 5 விழுக்காடு உயர்த்தப்பட்டிருக்கிறது. 6 ஆயிரம் லிட்டர் குடிநீர் 435 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்தது. அதன் விலை .499 ரூபாயாகவும், 9 ஆயிரம் லிட்டர் தண்ணீர் 700 ரூபாயில் இருந்து 735 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. வணிக ரீதியாக வினியோகிக்கப்படும் லாரி குடிநீரின் விலையையும் வாரியம் உயர்த்தியுள்ளது. 3 ஆயிரம் லிட்டர் 500 ரூபாய், 6 ஆயிரம் லிட்டர் 735 ரூபாய், 9 ஆயிரம் லிட்டர் 1,050 ரூபாய், 12 ஆயிரம் லிட்டர் 1,400 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது.
வணிக கணக்கு பதிவியல் பட்டய படிப்பு துவக்கம்
சென்னை,அக்.18 வணிக கணக்கு பதிவி யல் (பிசினஸ் அக்கவுண் டிங்) மற்றும் அலுவலக நிர்வாகத் திறன் குறித்த சான்றிதழ் வகுப்புகளை சென்னையில் உள்ள டிஏவி கல்விக்குழுமம் தொடங்கி யுள்ளது. எந்தத்துறையை சேர்ந்த வர்களாக இருந்தாலும் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருந்தால் இந்த வணிக கணக்குபதிவியல் மற்றும் அலுவலக திறன் குறித்த பயிற்சியில் சேரலாம் என்று சென்னையில் செய்தியாளர் களிடம் பேசிய டிஏவி தாளா ளர் வசந்தா பாலசுப்பிரமணி யன் கூறினார். இந்த பாடத் திட்டம் ஒரு அலுவலகத்திற்கு தேவையான அவசியமான அனைத்தையும் உள்ளடக்கி யுள்ளது என்றும் அனைத்து பாடங்களும் அடிப்படை நிலையில் இருந்து தொடங் கப்படுவதால் அனைவரா லும் முழுமையாகவும் எளி மையாகவும் புரிந்து கொண்டு படிக்கமுடியும் என்றும் அவர் கூறினார். மேலும் எம்எஸ் ஆபிஸ் மற்றும் டேலி போன்றவை கற்பிக்கப்படுவதால் கணினி அறிவை எளிதாகப் பெறுவ தோடு பாடத்திட்டத்திலும் சிறந்த அறிவைபெறமுடியும் என்றும் அவர் தெரிவித்தார். சிறந்த ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் புதிய பயிற்சித்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக வும் ஓராண்டில் சுமார் 30 தேர்வுகளை வெற்றிகரமாக எழுதி முடிப்பவர்களுக்கே பட்டயம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த பயிற்சியை முடிப்பவர் களுக்கு டிஏவி பள்ளியில் மட்டுமல்ல இதர முன்னணி பள்ளிகளிலும் ஆசிரியர் பணி வழங்கப்படும் என்றும் சாந்தா கூறினார். பேட்டியின்போது டிஏவி செயலாளர் விகாஷ் ஆர்யா, துணைத்தலைவர் ராஜிவ் சௌத்திரி, இயக்குநர் சாந்தி அசோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆய்வாளர், உதவி ஆய்வாளர்களுக்கு ரூ. 3 லட்சம் அபராதம்: மனித உரிமை ஆணையம்
சென்னை, அக். 18- சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் பார்வதி. இவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2015ஆம் ஆண்டு கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் கனகராஜ், உதவி ஆய்வாளர்கள் ஆறுமுகம், சதீஷ்குமார் ஆகியோர் எனது வீட்டிற்கு வந்து என்னை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு என்னை லத்தியாலும், பூட்ஸ் காலாலும் தாக்கினர். மேலும் பொய் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் ஜாமினில் வெளிவந்த நான் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டேன். எனவே ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். அந்த வழக்கு மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாட்சியம் மற்றும் ஆவணங்களை பார்க்கும் போது ஆய்வாளர் கனகராஜ் உட்பட 3 பேரும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. எனவே அவர்கள் 3 பேருக்கும் சேர்த்து 3 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் வழங்கிவிட்டு, ஆய்வாளர், உதவி ஆய்வா ளர்கள் ஆகியோரிடம் இருந்து தலா ஒரு லட்ச ரூபாய் வீதம் வசூலித்துக் கொள்ளலாம். மேலும் அந்த் 3 பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று உத்தர விட்டுள்ளார்.
விதை உற்பத்தியாளர்களுக்கு வேளாண் துறை பயிற்சி
மதுராந்தகம், அக். 18- விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விதைப் பண்ணை விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி குறித்து வேளாண்மைத் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது காஞ்சிபுரம் மாவட்டம் வேளாண் துறை விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று துறை சார்பில் மதுராந்தகம், அச்சி றுப்பாக்கம், சித்தாமூர், திருக்கழுக்குன்றம், காட்டாங்குளத் தூர், திருப்போரூர், சிட்லபாக்கம், உள்ளிட்ட வட்டாரத்தைச் சார்ந்த விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விதைப்பண்ணை விவசாயிகளுக்கு தரமான விதைகள் உற்பத்தியில் விதைச் சான்று நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி மதுராந்தகம் வேளாண்மைத் துறை அலுவலகத்தில் நடைபெற்றது. பயிற்சியினை காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் ஜோசப் ஹெக்டர் தலைமை தாங்கி துவக்கி வைத்தார் இப்பயிற்சியில் விதை அலுவலர்கள் மற்றும் விதைப் பண்ணை விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி குறித்த தொழில்நுட்பங்கள் மற்றும் விதைச்சான்று நடைமுறை விதி கள், விதைப்பு அறிக்கை தயார் செய்தல், விதைப்பண்ணை பதிவு பதிவு செய்தல், வயலாய்வு செய்தல், கலவன்களை நீக்குதல், அறுவடை செய்த விதைகளை முன் சுத்தி செய்தல், காலத்தே சுத்தி சுத்தி அறிக்கை பெற்று விதைச் சுத்தி நிலையம் கொண்டு வருதல் குறித்த விதிமுறைகளை காஞ்சிபுரம் விதைச் சான்று உதவி இயக்குனர் கு.ஜெயராமன், மதுராந்தகம் வேளாண்மை உதவி இயக்குநர் சரவணன், விதைச் சான்று அலுவலர் பாலபாரதி ஆகியோர் விதைப்பண்ணை விவசாயி களுக்கும், உதவி விதை அலுவலர்களுக்கும் விரிவாக எடுத்துரைத்தனர்.
நிரந்தர வைப்புடன் கூடிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
சென்னை, அக். 18- ஐசிஐசிஐ வங்கி எஃப்டி ஹெல்த் என்ற புதிய வைப்புக் கணக்குக் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது. நிரந்தர வைப்புக் கணக்கு எனப்படும் எஃப்டி உடன் வாடிக்கையாளர்கள் சிக்க லான 33 வகை நோய்களுக்கு காப்பீட்டுச் சேவையையும் பெறலாம் இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர்கள், முத லாவது ஆண்டில் காப் பீட்டுச் சலுகையை இலவச மாகப் பெறலாம். அதன் பிறகு அவர்கள் அதைப் புதுப்பிக்க வேண்டும். ஐசிஐசிஐ வங்கியில் 2 லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்புக் கணக்கு தொடங்கும் வாடிக்கையா ளர்கள் ஐசிஐசிஐ லொம் பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் 1 லட்சம் ரூபாய் வரையில் சிக்கலான நோய்க் காப்பீட்டுச் சலுகையைப் பெற இயலும் என்று வங்கி யின் செய்திக்குறிப்பு தெரி விக்கிறது.