சென்னை,டிச.2-
தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை கடந்த 2 ஆண்டுகளாக அரசியல் பிரமுகர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் சோதனையில் என்ற பெயரில் ஒன்றிய பாஜக அரசின் ஏவல் துறையாக ஈடுபட்டு வருகிறது.
அதேபோல், பாஜக ஆட்சியில் இல்லாத கேரளா, தில்லி, பீகார் என்று பல்வேறு மாநிலங்களில் எதிர் கட்சிகளை அமலாக்கத்துறை அதிகாரிகளை கொண்டு ஒன்றிய பாஜகஅரசு மிரட்டி வருகிறது.
இந்த நிலையில், மணல் குவாரிகளில் போலியாக ரசீதுகளை தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர்கள் 10 பேருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த நிலையில் லஞ்சம் வாங்கிய மதுரையை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழ்நாடு காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
வசமாக மாட்டிக்கொண்ட அமலாக்கத்துறைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இரா. முத்தரசன் (சிபிஐ):
திண்டுக்கல் பகுதியில் அமலாக்கத்துறை அதிகாரி, மருத்துவர் ஒருவரை மிரட்டி பணம் பறித்து குற்றச்செயலில் ஈடுபட்டபோது தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அரசியலமைப்பு சட்டப்படி தற்சார்பு அதிகாரம் கொண்ட அமலாக்கத்துறை, வருமான வரித்துறையில், ஆளுநர் மாளிகையில் உள்ளிட்ட அமைப்புகள் ஒன்றிய பாஜக அரசு அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலுக்கு பயன்படுத்தியது அம்பலமானது.
கி.வீரமணி (திக):
அமலாக்கத்துறையில் உள்ளவர்கள் எல்லாம் தூய்மையானவர்கள் அல்ல. மதுரையில் லஞ்சம் வாங்கிய சட்டத்தின் மூலம் ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுபிடித்து கைது செய்துள்ளது.
சாயம் வெளுத்துவிட்டது வைகோ (மதிமுக): தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை மிகத் திறமையாக செயல்பட்டு, அமலாக்கத் துறை அதிகாரி பிடித்தது பாராட்டுக்குரியதாகும். பாஜக அரசு, தனது அரசியல் எதிரிகளை பழிவாங்க பயன்படுத்தும் கருவியான அமலாக்கத் துறையில் எந்த அளவுக்கு லஞ்சம் ஊழல் புரையோடிக் கிடக்கும் என்பதற்கு அமலாக்கத்துறை அதிகாரியின் கைது வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.