சென்னை, மார்ச் 12- தமிழ்நாட்டில் திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்ட ணியில் மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய இரண்டு தொகுதிகளில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடு கிறது.
முதலமைச்சருடன் சந்திப்பு-ஒப்பந்தம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ் ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், பெ.சண்முகம், மாநில செயற் குழு உறுப்பினர் என். குணசேகரன் ஆகியோர் மார்ச் 12 செவ்வாயன்று காலை சந்தித்தனர். அப்போது தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அந்த ஒப்பந்தத்தில், “நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திரா விடர் முன்னேற்றக் கழகமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்ற தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக 29.2.2024 அன்று செய்து கொண்ட தொகுதி ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, திண்டுக்கல் ஆகிய தொகுதி களில் போட்டியிடுவதென 12.3.2024 அன்று தீர்மானிக்கப்பட்டது” என குறிப்பிடப்பட்டிருந்தது.
திமுக பொதுச்செயலாளர் துரை முருகன், தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தைக் குழுவினர் டி.ஆர்.பாலு, க.பொன்முடி, எ.வ.வேலு, அர.சக்கர பாணி ஆகியோர் உடனிருந்தனர்.
இதையடுத்து, செய்தியாளர் களைச் சந்தித்த கே. பாலகிருஷ்ணன், “திமுக கூட்டணியில் எங்கள் கட்சிக்கு மதுரை தொகுதியும் திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறுவதோடு, 40 தொகுதியிலும் எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்” என்றார்.
பரஸ்பர மாற்றம்
நாங்கள் (சிபிஎம்) கடந்த முறை வென்ற கோவையை விட்டுக் கொடுத்தோம். அவர்கள் (திமுக) வென்ற திண்டுக்கல்லை எங்களுக்குவிட்டுக் கொடுத்துள்ளனர். கூட்டணி என்று வரும்போது இதுபோன்ற மாற்றங்கள் வருவது இயற்கைதான். கூட்டணிக் கட்சிகள் பரஸ்பர புரிதல் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதற்கு முன்பு, 1977ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டு உள்ளது என்றும் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாடு முழுவதும் பாஜக எதிர்ப்பலை தீவிரம்
பாஜக ஆட்சி செய்யாத மாநிலங் களில் எதிர்க்கட்சிகளை உடைப்ப தற்கும், கட்சித் தலைவர்கள், எம்எல்ஏக்களை மிரட்டி பேரம் பேசி அடிபணிய வைக்கும் வேலைகளில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டு வரு கிறது. பல மாநிலங்களில் தேர்தல் அதி காரிகளை பகடைக்காயாக பயன் படுத்தி வருகிறது. ஆனாலும் வெற்றி பெறமுடியவில்லை.
அவசர கோலத்தில் ராமர் கோயி லை திறந்தார்கள். அதுவும் வெற்றிக்கு கை கொடுக்காது என்பது தெரிந்து விட்டது. தேர்தல் பத்திர ஊழல் மூலம் பாஜக அம்பலமாகிவிட்டது. நாடு முழு வதும் பாஜக எதிர்ப்பு அலை தீவிர மடைந்துள்ளது. இதனால் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது. அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தியும் பலன் கிடைக்கவில்லை. தோல்வி பயம் அதிகமானதால் குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இது வும் பாஜகவுக்கு பலன் கொடுக்காது. படுதோல்வியைச் சந்திக்கும் என்றும் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாகை, திருப்பூரில் சிபிஐ போட்டி
அதைத்தொடர்ந்து இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் வென்ற தொகுதி களான திருப்பூர், நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகள் மீண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தத் தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், நாட்டில் ஜனநாய கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறையில் தான் இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது என்றும் கட்சி வேட்பா ளர்கள் யார் என்பது பற்றிய அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைவர்கள் கே.சுப்பராயன், கோ. பழனிசாமி, மு.வீரபாண்டியன், வை.சிவபுண்ணியம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.