சென்னை, மார்ச் 1 - சென்னை பல்கலைக்கழகத் தின் முடக்கப்பட்ட 42 வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை விடுவித்துள்ளது.
50 விழுக்காட்டிற்கு மேல் அரசு நிதி பெறும் கல்வி நிறுவனங் களுக்கு வரி விலக்கு அளிக்கப்படு கிறது. தணிக்கைத் துறை ஆட்சே பணை காரணமாக 2017ஆம் ஆண்டிலிருந்து மாநில அரசு நிதி ஒதுக்கீட்டை குறைக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் 50 விழுக்கா ட்டிற்கும் கீழ் நிதி பெறும் கல்வி நிறு வனம் என்ற பட்டியலில் சென்னைப் பல்கலைக் கழகம் வந்தது. இதன் விளைவாக 2017 - 2021 வரை யிலான காலகட்டத்திற்கு ரூ.424 கோடி வரி செலுத்துமாறு சென்னைப் பல்கலைக் கழ கத்திற்கு வருமான வரித்துறை உத்தரவிட்டது. வரியை பல்கலைக் கழகம் செலுத்தாததால் வங்கிக் கணக்குகளை முடக்கியது.
இதனால் ஊழியர்கள், பணியாளர்களுக்கு ஊதியம் தர முடியாத நிலை ஏற்பட்டது. மாணவர்களும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை விடுவிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு தலையிட்டு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறிழைத்த அதிகாரி கள் மீது துறை ரீதியான நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பிப்.16 அன்று இந்திய மாணவர் சங்கம் போராட்டத்தை தொடங்கியது.
சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங் களின் கூட்டு நடவடிக்கைக்குழு பிப்.23 உண்ணாநிலை போராட்டத் தை நடத்தியது. மார்ச் 1 அன்று காலவரையற்ற வேலை நிறுத்தத் தையும் தொடங்கியது. இந்த நிலை யில் தமிழக அரசின் வேண்டு கோளை ஏற்று வருமான வரித் துறை முடக்கி வைத்திருந்த 42 கணக்குகளையும் விடுவித்துள்ளது.
இந்த தகவலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கூட்டமைப்பினரிடம் தெரிவித்த பல்கலைக் கழகப் பதி வாளர் ஏழுமலை, ஊதியம் அவர வர் வங்கிக் கணக்கில் உடனடி யாக வரவு வைக்கப்படும் என்றார். இதனையடுத்து கூட்டமைப்பினர் போராட்டத்தை ஒத்தி வைத்தனர்.