சென்னை, டிச. 26 - வசிப்பிட தூர விதிகளை காரணம் காட்டி, மாணவர் சேர்க்கை வழங்கா மல், இடங்களை காலியாக வைத்திருப்பது, கட்டாய கல்வி உரிமை சட்டம் கொண்டு வரப்பட்ட தற்கான நோக்கத்திற்கு எதிராக அமைந்துவிடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது
கோவை மாவட்டம், வால்பா றையில் வசிக்கும் பட்டியலினத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் தன் மகனுக்கு, அங்குள்ள பியூலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி 25 விழுக்காடு ஒதுக்கீட்டில் இட மளிக்கக் கோரி கடந்த 2022 மே மாதம் விண்ணப்பித்துள்ளார்.
அந்த விண்ணப்பத்தை பரி சீலித்த பள்ளி நிர்வாகம், லட்சு மணனின் வீடு பள்ளியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மேல் இருப்பதாக கூறி, அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது. இதையடுத்து கல்விக் கட்டணத்தை செலுத்தி தன் மகனை எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்துள்ளார்.
ஒதுக்கீட்டில் சேர்க்க மறுத்ததை எதிர்த்து லட்சுமணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் அளித்த தீர்ப்பு வருமாறு:
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, பள்ளியின் இருப்பி டம், தூரம் குறித்த விதிகள் கட்டாய மில்லை என்றும், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இடங்கள் காலியாக இருந்தால், நிர்ணயிக்கப் பட்ட தூரத்திற்கு அப்பால் உள்ள வர்களையும் சேர்க்கலாம் என தெளி வுபடுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள் ளார்.
இந்த பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட 16 இடங்களில் 2022-23 மற்றும் 2023-24 ஆம் கல்வியாண்டுகளில் 3 மற்றும் 8 இடங்கள் காலியாக உள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி, காலியிடம் இருக்கும்போது தூர விதிகளை குறிப்பிட்டு, சில இடங் களை காலியாக வைத்திருப்பது என்பது, 6 முதல் 16 வயதானவர் களுக்கு இலவச கல்வியை வழங்கு வதற்காக கொண்டு வரப்பட்ட சட்டத்தின் நோக்கத்திற்கு எதிராக அமைந்துவிடும்.
கட்டணத்தை திருப்பி வழங்குக!
மேலும், அந்த பகுதியில் பியூலா மெட்ரிக் பள்ளியை தவிர வேறு பள்ளி ஏதும் இல்லாததால், மனுதாரரின் மகனுக்கு 3 வாரத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென பள்ளி கல்வி துறைக்கு உத்தரவிடப்படுகிறது. எல்.கே.ஜி. மாணவர் சேர்க்கைக் காக வசூலித்த கட்டணத்தை 2 வாரங்களில் மனுதாரரிடம் பள்ளி நிர்வாகம் திருப்பி செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.