tamilnadu

திருமணமான மகன் இறந்து விட்டால் சொத்தில் தாய்க்கு பங்கு இல்லை

சென்னை, நவ. 18- இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின்படி, திருமணமான மகன் இறந்து விட்டால்,  அவரது சொத்தில் தாய் பங்கு கேட்க முடி யாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நாகப்பட்டினத்தை சேர்ந்த மோசஸ் என்பவர் கடந்த 2012ஆம் ஆண்டு உயிரி ழந்துள்ளார். அவருடைய வயதான தாய் பவுலின் இருதய மேரி மகனின் சொத்தில் பங்கு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நாகை நீதிமன்றம் மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு உள்ளது என தீர்ப்பளித்தது. நாகை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மோசசின் மனைவி அக்னஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், திருமணமான மகன் இறந்த நிலையில், சொத்தில் தாய் பங்கு கேட்பதற்கான கேள்வியே எழ வில்லை. ஏனெனில் மனைவி மற்றும் குழந்தைகளுக்குத் தான் சொத்தில் பங்கு உள்ளது. தாய்க்கு பங்கு உண்டு என்ற நாகை மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்ப ளித்துள்ளது.