செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அமர்வு முன்பு இன்று விசாரணை நடந்தது. அப்போது, இந்த வழக்கில் ஏற்கெனவே தான் பிறப்பித்த தீர்ப்பில் உறுதியாக இருப்பதாக நீதிபதி நிஷா பானு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் அனைத்து அம்சங்கள் குறித்தும் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கும் என்றும், இந்த வழக்கை இங்கு நிலுவையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறிய நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.