சென்னை, மார்ச் 23 - இந்தியா கூட்டணியின் சார்பில் மத்திய சென்னை மக்களவைத் தொகு தியில் வெற்றி வேட்பாளராக மீண்டும் தயாநிதி மாறன் களம் இறக்கப்பட்டுள் ளார். மத்திய சென்னை மக்களவைத் தொகுதி, சேப்பாக்கம் - திருவல்லிக் கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், வில்லிவாக்கம், எழும்பூர், துறை முகம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி இருக்கிறது
. 6 லட்சத்து 64 ஆயிரத்து 76 ஆண் வாக்காளர்கள், 6 லட்சத்து 78 ஆயிரத்து 658 பெண் வாக்காளர்கள், 433 மூன்றாம் பாலி னத்தவர் வாக்காளர்கள் என மொத்தம் 13 லட்சத்து 43ஆயிரத்து 167 பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த தொகுதியில் 2004, 2009, 2019 மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற முன்னாள் ஒன்றிய அமைச்சர் தயாநிதி மாறன் (வயது 57) மீண்டும் போட்டியிடுகிறார். 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளரை விட 3 லட்சத்து ஆயிரத்து 520 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் தயாநிதிமாறனை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிகவை சேர்ந்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பி.பார்த்தசாரதியும், பாஜக சார்பில் வினோஜ் ஜி.செல்வ மும், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் ஆர்.கார்த்திகேயனும் போட்டியிடு கின்றனர்.
இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக பலம் பொருந்தியதாக உள்ளது. இந்த தொகுதிகள் அனைத்திலும் திமுக-வை சேர்ந்தவர்களே சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். சென்னை மாநகராட்சியும் திமுக வசமே உள்ளது.
ஒன்றிய அமைச்சராகவும், நாடாளு மன்ற உறுப்பினராகவும் இருந்து தயா நிதிமாறன் தொகுதிக்கு செய்த பணி கள், மாநில நலனுக்காக வலிமையாக குரல் கொடுத்து வருவது, ஒன்றிய அரசு - அதிமுக மீதான அதிருப்தி போன்றவை இவரது வெற்றிக்கு உறுதுணையாக உள்ளது. எனவே தயாநிதி மாறன் இந்த முறையும் லட்சக்கணக்கான வாக்கு கள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவது உறுதி.