திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரத்தை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மார்ச் 22 வெள்ளியன்று மாலை திருச்சியிலிருந்து துவக்கினார். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ, பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு ஆகியோரை ஆதரித்து உரையாற்றினார்.