சென்னையில் இதுவரையில் இல்லாத வகையில் இந்த மாதத்தில் அதிகளவில் சளி, காய்ச்சல், இருமலால் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையிள் உள்ள மருத்துவமனைகளில் 60% குழந்தைகள் சளி,காய்ச்சல்,இருமலுடன் அனுமதிக்கப்படுகின்றனர். இது நுரையீரல் பாதிப்பின் முதல் கட்டம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சளி,காய்ச்சல்,இருமலுடன் இருக்கும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும், வருடம் தவறாமல் குழந்தைகளுக்கு ஃபுளு தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுருத்தியுள்ளனர்.