மக்களவை தேர்தலில் திமுக மற்றும் அதன் தலைமையில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரங்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம்
வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், பெரம்பலூர், தேனி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சி திருவள்ளூர்(தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கப்பட்ட மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கீடு. மதுரையில் மீண்டும் சு.வெங்கடேசன் மற்றும் திண்டுக்கல்லில் சச்சிதானந்தம் ஆகியோர் போட்டியிடுகிறார்.
இந்திய கம்யூனிஸ்ட்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் தொகுதிகள் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் மீண்டும் கே.சுப்பராயன், நாகையில் வை.செல்வராஜு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள்
விசிகவுக்கு மீண்டும் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்
மதிமுக சார்பில் துரை வைகோ திருச்சியில் போட்டியிடுகிறார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய முஸ்லீம் லீக் கட்சி:
கொமதேகவுக்கு நாமக்கல்லும், இந்திய முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் மீண்டும் நவாஸ் கனி போட்டியிடுகிறார்.