உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க நாளை தேர்தல் ஆணையம் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து கட்சியினரும் தேர்தல் முன்னேற்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் நாளை காலை 11.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.