சென்னை, மார்ச் 8- தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் கடன் உதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான உன்னத நோக்கத்தின் அடிப்படையி லும், தூய்மைப்பணியில் ஈடுபட்டுள்ள பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் நேரடியாக கழிவுநீர் அகற்றும் பணி செய்வதை தவிர்க்கும் பொருட்டும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் 50 விழுக்காடு மானியமாக வும், புதிய தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் இதர பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 40 விழுக்காடு மானியமாக வும், என மொத்தம் 213 நபர்களுக்கு ரூ.125.86 கோடி திட்ட மதிப்பீட்டில்,ரூ. 61.29 கோடி மானியமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறு வனங்கள் துறை சார்பில் தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோ ர்களாக மாற்றுவதற்கான உன்னத நோக்கத்தின் அடிப்படையில் 213 தூய்மைப் பணியாளர்களுக்கு நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திக்கான கடன் உதவிக்கான ஆணைகளை வழங்கி டும் அடையாளமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 தூய்மைப் பணியாளர் களுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ. அன்பரசன், நக ராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா. கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர் கள் கலந்து கொண்டனர்.