உளுந்தூர்பேட்டை, ஜூலை 2- உளுந்தூர்பேட்டை, சின்னசேலம், விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் இயங்கும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு படித்து முடித்த, படித்துக்கொண்டி ருக்கும் மாணவர்கள் தங்க ளுக்கு மடிக்கணினி வழங் கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உளுந்தூர்பேட்டையில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் வட்டாட்சியர் அலு வலகம் முன்பு மாவட்ட துணைத் தலைவர் சின்ன ராசு தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் ரிச்சர்ட்பிரபு, செயலாளர் க.வி.ஸ்ரீபத், வாலிபர் சங் கத்தின் மாவட்டத் தலைவர் பழனி ஆகியோர் பேசினர். டார்வின், காரல்மார்க்ஸ், சேகுவேரா உள்ளிட்ட ஏராள மான மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். அதேபோல் சின்ன சேலம் அருகே கூகையூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பெரம்பலூர், சின்னசேலம் சாலையில் கூகையூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். கீழ்பெரும்பாக் கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆட்சி யரிடம் மனு கொடுத்தனர்.