வேலூர், ஜன.20- விஐடி பல்கலைக்கழகத் தில் தரவு மேலாண்மை, பகுப்பாய்வு மற்றும் புதுப்பிப்பு கண்டுபிடிப்புகள் குறித்து 8 வது சர்வதேச கருத்தரங்கம் துவங்கியது. இந்த கருத்தரங்கில் முனை வர். அமோல் கோஜே தரவு அறிவியல் அமைப்பு குறித்து விளக்கினார்.
சர்வதேச கருத்தரத்தின் புத்தகத்தை விஐடி வேந்தர் டாக்டர். கோ. விசுவநாதன் மற்றும் சிறப்பு விருந்தினர் ஐஐடி பெங்களூர் இயக்கு நர் முனைவர். தேபப் பரதா தாஸ் வெளியிட்டனர். தேபப் பரதா தாஸ் தனது துவக்க உரையில், “400 கோடி மக்கள் உலக அளவில் இணைய சேவையை பயன்படுத்து கிறார்கள். வரும் காலங் களில் இணைய சேவை அதிகரிக்கும்.
தரவு அறிவியல் தொழில்நுட்பம் நம் அன்றாட வாழ்வில் அங்கம் வகிக்கிறது. புதிய பொருட்கள் மற்றும் பல்வேறு சேவைகளுக்கு இந்த தொழில்நுட்பம் பயன் படுத்தப்படுகிறது” என்றார். முன்னதாக தரவு அறிவியல் அமைப்பின் சார்பில் அதன் துணைத் தலைவர் முனைவர். அம்லன் சக்ரபர்த்தி, அரசி யல், கல்வி மற்றும் சமுதாய முன்னேற்றம் போன்ற பல்வேறு சேவைகளை பாராட்டி விஐடி வேந்தர் டாக்டர் கோ. விசுவநா தனுக்கு வாழ்நாள் சாதனை யாளர் விருது வழங்கினார். இந்த விழாவில் விஐடி பல்கலைக்கழகத்தின் இணை துணை வேந்தர் முனைவர் பதிவாளர் பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.