tamilnadu

img

விவிபேட் ‘ஒப்புகை’ சீட்டுகளை ஒப்பிட்டு தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்

சென்னை, பிப். 23 - ஒப்புகைச் சீட்டுகளை (விவி பேட் ரசீது) ஒப்பிட்டு தேர்தல் முடிவு களை அறிவிக்க வலியுறுத்தி வெள்ளியன்று (பிப்.23) வள்ளுவர் கோட்டம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மட்டும் வைத்து தேர்தலை நடத்தக் கூடாது.

அனை த்து வாக்குப்பதிவு இயந்திரங்க ளுடன் ஒப்புகைச் சீட்டு கருவி யை இணைக்க வேண்டும்; வாக்க ளிக்கும் வாக்காளர்களின் ஒப்பு கைச் சீட்டினை சரிபார்த்து, தனியே ஒரு பெட்டியில் போட வேண்டும். அதன்பின், இயந்திரத்தில் உள்ள எண்ணிக்கை, ஒப்புகைச் சீட்டுகள் எண்ணிக்கையை ஒப்பிட்டு தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை ஆர்ப்பாட்டத்தின் போது, செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் தொல்.திரு மாவளவன், “இந்தியா கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒப்புகை சீட்டை எண்ணியே தேர்தல் முடிவுக ளை அறிவிக்க கோருகின்றன.

இதனை தேர்தல் ஆணையம் பரி சீலிக்க வேண்டும். வாக்கு எந்தி ரத்தில் 100 விழுக்காடு முறைகேடு செய்தால் மக்கள் சந்தேகிப்பார் கள் என்பதால் புதுப் புது உத்தி களை பாஜக கையாள்கிறது. எனவேதான், 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பிரதமர் கூறுகிறார்” என்றார்.

செய்தியாளர்களின் கேள்விக ளுக்கு பதிலளித்த அவர், “திமுக கூட்டணிக் கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கின்றன. வாக்கு வங்கி அரசியலுக்காக பாமக சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறது. தொகுதிப் பங்கீட்டை அடுத்த கட்ட பேச்சு வார்த்தையில் சுமூகமாக பேசி தீர்ப்போம். திமுக மட்டுமே கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணியை உருவாக்க முடியாமல் உள்ளன” என்றார்.

ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்பு
இந்த ஆர்ப்பாட்டத்தை ஆத ரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன் பேசுகையில், “உச்சநீதி மன்றத் தீர்ப்புக்கு எதிராக  தேர்தல் ஆணையர் நியமனச் சட்டத்தை ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்திருப்பது மோசடியானது. சண்டிகர் மேயர் தேர்தலில் மோச டியாக பாஜக பெற்ற வெற்றியை  உச்சநீதிமன்றம் ரத்து செய்துள் ளது. தேர்தல் பத்திர திட்ட மோச டியை அம்பலப்படுத்தி உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு அளித்துள்ளது. புல்வாமா தாக்கு தலை அம்பலப்படுத்திய காஷ்மீர் முன்னாள்  ஆளுநர் வீட்டில் சோ தனை நடத்துகின்றனர். பாஜகவின் உண்மையான கூட்டணியாக சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற வைதான் உள்ளன” என்று விமர்சித்தார்.

சிபிஐ துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், விசிக துணைப் பொதுச் செயலாளர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், ஆதவ் அர்ஜூன், பேரா.காந்தராஜ், மூத்த பத்திரிகையாளர் கா.அய்ய நாதன் உள்ளிட்டோரும் ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்று உரை யாற்றினர்.