tamilnadu

img

சமூக நீதி தீபத்தை கையில் ஏந்துவோம்: மு.க.ஸ்டாலின்....

சென்னை:
முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் விட்டுச் சென்ற சமூகநீதி தீபத்தை, களத்தில் கையில் ஏந்தி முன்னெடுத்துச் செல்ல வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் அவரது நூற்றாண்டு விழாவைக் கொண் டாடுகிறோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பத்தாவது குடியரசுத் தலைவரான கே.ஆர்.நாராயணின் நூற்றாண்டு பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் கே.ஆர்.நாராயணனின் பிறந்த நாள் நூற்றாண்டு இன்று.இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில், கலைஞரால் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, நாட்டின் பத்தாவது குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றவர்.அவர் குடியரசுத் தலைவரான போது “நமது ஜனநாயகத்தில் நலிந்த பிரிவினரின் வெற்றிச் சரித்திரத்தையும், சமூகநீதியின் புதிய சகாப்தத்தையும் தொடங்கி வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கலைஞர் வாழ்த்தியது, இன்றும் என் செவிகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.அவரை அழைத்து வந்து, தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் தொடங்கப் பட்ட சட்டப் பல்கலைக் கழகத்திற்கு இந்தியாவிலேயே முதன்முறையாக அம் பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டி, திறக்கச் செய்தார் கலைஞர்.திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சுவடுகள் நிரம்பியிருக்கும் அண்ணா அறிவாலயத் தில் உள்ள கலைஞர் கருவூலத்தையும் திறந்து வைத்தவரும் அவரே.கே.ஆர்.நாராயணன் விட்டுச் சென்ற சமூகநீதி தீபத்தை, வீறுகொண்ட விவேகத்துடன் களத்தில் கையில் ஏந்தி முன்னெடுத்துச் செல்ல வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம்.அவருடைய கனவுகள் நிறைவேற, தொடர்ந்து பாடுபடுவோம். அந்த வெற்றிச் சரித்திரம் மீண்டும் திரும்ப, சபதம் ஏற்போம்” என குறிப்பிட்டுள்ளார்.