tamilnadu

img

மக்களவைத் தேர்தலில் தமிழகம் - புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்!

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.  ஸ்டாலின் தொண்டர்களுக்கு இதுதொடர்பாக எழுதியுள்ள கடிதத்தின் சுருக்கம் வருமாறு:-

பாசிச பாஜக ஆட்சியின் சர்வாதிகார, ஜனநா யக விரோத போக்கிற்கு முடிவு கட்ட வேண்டிய உறுதியுடன் இருக்கிறோம். மக்கள் தாங்கள் விரும்பிய மொழியில் பேசுவதை, விரும்பிய தொழிலைச் செய்வது, விரும்பிய உடை உடுத்து வதை, விரும்பிய உணவு உண்பதை, விரும்பிய அரசைத் தேர்ந்தெடுப்பதை உறுதி செய்யவேண்டும்.

இவற்றுக்கு அடிப்படையான மாநில உரிமை களை கட்டிக்காப்பதற்கான மக்களவைத் தேர்தலின் வெற்றி, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து, தேர்தல் களப்  பணிகளை முன்கூட்டியே தொடங்கி மிகுந்த உற்சா கத்துடன் அதை முன்னெடுத்துச் செல்கிறது கழகம்.

தோழமை உணர்வை மதிப்போம்!

மக்களவைத் தேர்தல் பணிகளை மேற்கொள் வதற்காக கூட்டணி கட்சியினருடன் பேச்சு வார்த்தை நடத்துவது உள்ளிட்ட மூன்று குழுக்கள் அறிவிக்கப்பட்டு இந்தக் குழுக்கள் தங்கள் பணி களை உடனடியாக தொடங்கி விட்டன. தோழ மைக் கட்சிகளின் தொகுதி உடன்பாடு குறித்து  பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கழகப் பொரு ளாளர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப் பட்ட குழு காங்கிரஸ் கட்சியுடன் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து, மற்ற தோழ மைக் கட்சியினருடன் ஆலோசனையில் உள்ளனர் தோழமை உணர்வை மதித்தும், நாட்டின் நிலை மையை உணர்ந்தும் பேச்சுவார்த்தைகள் சுமூக மாக நடைபெற்று வருவது குறித்த செய்திகள் எனக்கு எட்டியபடி உள்ளன.

பாஜகவுக்கு ‘0’!
சொன்னதைச் செய்வோம் – செய்வதைச் சொல்வோம் என்பதுதான் கழகத்தின் தேர்தல் வாக்குறுதி. அக்கவுண்ட்டில் ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்றோ, ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்றோ, விவசாயிகளின் வருமானத்தை மும்மடங்காக்கு வோம் என்றோ வாக்குறுதி அளித்துவிட்டு, எல்லாமே ஜும்லா என்று ஏமாற்றுகின்ற பாஜக  போலவோ அதன் கள்ளக்கூட்டணியான அதிமுக  போலவோ திமுக-வின் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதிகள் இருக்காது.

இந்தியா கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் போது, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பில் திமுக இருக்கும். ஜனவரி 26 அன்று, திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமா வளவன் முன்னெடுத்து நடத்திய ‘வெல்லும் சனநா யகம்’ மாநாட்டில் நான் குறிப்பிட்டது போல, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக பூஜ்யம்தான்.

வழிகாட்டும் கூட்டணி!
பாஜகவுக்கு எதிரான வெற்றிக் கூட்டணி எப்படி  அமைய வேண்டும் என்பதை கடந்த 2019 மக்கள வைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யில் அமைத்த கூட்டணி வாயிலாக நிரூபித்துக் காட்டியது திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும். 

அதனைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலி லும் அதே கூட்டணி உறுதியாக களம் கண்டு, வெற்றிபெற்றதன் விளைவாக தமிழக அரசு அமைந்து, இந்தியாவுக்கே முன்னுதாரணமாக ஆட்சியை வழங்கி வருகிறது.

எதற்கும் அஞ்சமாட்டேன்!
நம்மைத் திசைத்திருப்ப அவதூறுகளை பரப்பு வதில் பாஜகவும் அதிமுகவும் சளைத்தவையல்ல. பொய் வழக்குகளின் பேரில் தங்களை எதிர்க்கும் ஜனநாயக சக்திகள் மீது மிரட்டல் நடவடிக்கை கள் மேற்கொள்வது ஒன்றே ஒன்றிய பாஜக அரசின் பத்தாண்டு கால சாதனைகளாக இருந்து வருகிறது.

திமுக-வை மிரட்டிப் பார்க்கும் வகையில் ஊட கப் பரபரப்புக்கான செயல்பாடுகள் இருக்கும். எதற்கும் அஞ்சாத இயக்கம்தான் திமுக என்பதை களத்தில் ஆற்றும் பணிகள் மூலம் அவர்களுக்கு புரிய வைப்போம். ஆதிக்க ஒன்றிய பாஜக அரசை அகற்றியே தீருவோம்!.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.