சென்னை, மார்ச் 11- எதிர்வரும் மக்கள வைத் தேர்தலில் மதவாத, பாசிச ஒன்றிய பாஜக அரசை தூக்கி எறிய வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கி யுள்ளன.
தேர்தல் தேதி மிக விரை வில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்தியா கூட்டணி நாடு முழுவதும் மாநில வாரி யாக கூட்டணியை இறுதி செய்து தொகுதி பங்கீட்டை முடித்து வருகிறது.
அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் திமுக தலை மையிலான கூட்டணி கட்சி கள் ‘இந்தியா’ கூட்டணியில் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலை சந்திக்கின்றன. இந்தக் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் புதிதாக இணைந் துள்ளது.
அக்கட்சி இந்த முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத நிலையில், 2025 மாநிலங்களவைத் தேர் தலில் திமுக ஒரு இடம் ஒதுக்க முடிவாகியுள்ளது. அதேநேரம், தமிழ்நாடு மற் றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்காக முழுமையாக பிரச்சாரம் செய்யப்போவ தாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறி வித்துள்ளார்.
கமலின் வருகையால் திமுக கூட்டணி மேலும் பலம டைந்திருப்பது பாஜக வினரை அதிர்ச்சிக்கு உள் ளாக்கியிருக்கிறது. இத னால், மக்கள் நீதி மய்யத்தை விமர்சித்து வருகின்றனர்.
இதற்கு கட்சியின் ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் கமல்ஹாசன் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட் டுள்ளார். அதில் அவர் கூறி யிருப்பதாவது:
“இந்தியாவின் தனித்து வம், அதன் பன்முகத்தன்மை தான் என நான் நம்புகிறேன். தற்போதைய நிலை என்பது ஒரு அவசரநிலை. இது, தமி ழகத்துக்கும் தேசத்துக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும். எதிர்வாத சக்தி களுக்கு இது கைகூடி விடக் கூடாது என்பதற்காக நாங் கள் ஒரு முடிவு எடுத்துள் ளோம். இந்த நேரத்தில் எந்த கட்சியில் இருந்தாலும் அனைவருமே சகோதரர்கள் தான். எதிர்க்கட்சியாக இருந் தாலும் என்னுடைய சகோத ரர்கள் தான். தேச நலனின் முக்கியத்துவம் கருதி நான் சிலவற்றை தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன். தேசத்துக்காக நாம் அனை வரும் ஒரே மேடையில் அமர வேண்டும். அது தான் என்னு டைய அரசியல்” என தெரி வித்துள்ளார்.