சென்னை மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டு வெளியேறும் மக்களுக்கு இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மதங்களை கடந்து தங்குவதற்கு தங்களது ஆலயக்கதவுகளை திறந்து விடுகின்றனர். சென்னை பாலவாக்கம் கரீம் நகர் பள்ளிவாசல், குரோம்பேட்டை ஹோலி ஏஞ்சல் கிறிஸ்தவ பள்ளிவளாகம் மற்றும் அமல அன்னை ஆலயம் உட்பட தலைநகரில் பல இடங்களில் உதவி தேவைப்படும் மக்களுக்கு பள்ளிவாசல், தேவாலய கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.