tamilnadu

img

பாஜக ஆட்சியின் வகுப்புவாத பாசிசத்தை வேரறுப்போம்!

சென்னை, மார்ச் 15 - பாஜக ஆட்சியின் வகுப்புவாத பாசிசத்தை வேரறுப்போம் என்று முதலமைச்சர் தனது சமூக வலைதளப் பதிவில் கூறி யிருக்கிறார்.

அதன் விவரம் வருமாறு:- “2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதலே பாஜக ஆட்சி இந்தியாவின் மதச் சார்பின்மைத் தன்மை யைச் சீர்குலைத்து, சகிப்பின்மையை வளர்த்து, நமது இஸ்லாமிய சமூகத்தவருக்கு எதிராக பாகுபாட்டை ஊக்குவித்து வருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற இந்திய அரசியலமைப்புச் சட்டங்களை நடைமுறைப் படுத்துவதன்வழியாக இசுலாமி யர் மீதான வெறுப்பைச் சட்டப்பூர்வமாக வழிவகுக்கிறது. இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான பன்னாட்டு நாளில், பாஜக ஆட்சியின் வகுப்புவாத பாசிசத்தை வேரறுத்து, பாஜகவின் பிடியிலிருந்து இந்தியாவின் பரந்துபட்ட பன்முக ஆன்மாவை மீட்க ஒன்றிணைய உறுதியேற்போம்”.

இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.